No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - துறவறம் மேற்கொண்ட சீவகன்..!!

Apr 22, 2023   Ramya   111    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... துறவறம் மேற்கொண்ட சீவகன்..!!

🌟மன்னருடைய ஆடையில் சென்ற சீவகன் சிறிது நேரத்தில் ஆடைகள் அனைத்தையும் களைந்து, துறவிகள் அணியக்கூடிய மிகவும் எளிமையான ஆடைகளை அணிந்து கொண்டான்.

🌟அதுமட்டுமல்லாமல் தலைமுடிகள் அனைத்தையும் நீக்கி மக்கள் முன்னிலையில் வந்து நின்றார். அவன் பின்னே சீவகனுடைய நண்பர்கள் அனைவரும், நந்தட்டனும், சீவகனுடைய மனைவியான எட்டு பேரும் துறவறம் மேற்கொள்வதற்கு தயாராக இருந்தார்கள்.

🌟சீவகன் மற்றும் அவனை சார்ந்தவர்களையும் கண்ட மக்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அரசர் மட்டும் தானே துறவறம் மேற்கொள்வதாக இருந்தார்கள். இப்பொழுது என்ன அரசிகள் அனைவரும் துறவறம் மேற்கொள்ளப் போகின்றார்களா? என்று அதிர்ச்சியாக, அவர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

🌟 அந்தக் கூட்டத்தில் இருந்த பணி பெண்களுக்கு மட்டுமே தெரிந்தது அரசர் எப்பொழுது துறவு மேற்கொள்ள போகின்றேன் என்று சொன்னாரோ.. அப்பொழுது அரசிகள் அனைவரும் சீவகனை பிடித்துக் கொண்டு கேட்ட கேள்விகளும், அழுத அழுகைகளும் அந்தப்புரத்தில் ஒரு பெரும் போர் நடைபெற்றது போல இருந்தது என்றே சொல்லும் அளவிற்கு அன்றைய தினம் இருந்தது.

🌟சீவகன் பலவாறு அவர்களுக்கு அறிவுரைகள் கூறி அவர்களுடைய மனதினை தேற்றினாலும், அவர்களுடைய முடிவை அவரால் மாற்றவே முடியவில்லை. வேறு வழி இல்லாமல் சீவகனும் அவர்களுடைய முடிவுக்கு ஒத்துழைக்கவே, அந்தப்புரத்தில் புயலுக்குப் பின் எப்படி ஒரு அமைதி ஏற்படுமோ, அதற்கு ஈடான அமைதியும் தோன்றியது என்று மனதில் எண்ணிக் கொண்டே அரசிகள் துறவு நிலையில் சீவகனுக்கு பின்பு சென்று கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

🌟 அனைவரிடத்திலும் இருந்து பிரியா விடை பெற்றுக் கொண்ட சீவகனும், அவனுடைய துணைவியர்கள், நண்பர்களும் என அனைவரும் நீண்ட ஒரு பயணத்தை மேற்கொண்டார்கள்.

🌟 அவர்களுடைய பயணத்தில் அசோக மரம் சூழ்ந்த ஒரு தவ பள்ளியை கண்டதும் சீவகனுடைய மனதில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியும், அருகனருளால் பக்தியும் அவன் உள்ளத்தில் பெருக்கெடுக்க துவங்கியது. அந்த இடத்தை விட்டு அவனால் செல்லவே முடியாத அளவில் அந்த இடம் அவனை இறுகப் பிணைத்துக் கொண்டது போல உணர்ந்தான்.

🌟 பின்பு சீவகன் அந்த இடத்தில் நின்று அசோக மரத்தினை பார்க்கின்ற பொழுது அவ்விடத்தில் ஸ்ரீ வர்த்தமான தீர்த்தங்கரரே அவன் கண்களுக்கு புலப்பட்டதை உணர்ந்தான்.

🌟 சீவகா! உன்னுடைய பிறவி நோக்கத்தை அடைந்து விட்டாய் போல இருக்கின்றதே.. என்று கூறுவது போல உணர்ந்ததும், அவ்விடத்திலேயே அமர்ந்து அருகனை மனதில் எண்ணி அவருக்கு உண்டான மந்திரத்தை மனதில் எழுப்ப அவ்விடத்தில் தோன்றிய ஒளியானது இரவில் கூட தவப்பள்ளி ஆனது. பகலில் இருப்பது போல தோற்றமளிக்க துவங்கியது.

🌟 அரசு அதிகாரங்கள், பதவிகள், பொன் பொருட்கள் என பல இருந்தும் அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சிகள் அனைத்தும் நிலையற்றவை என உணர்ந்து, அவைகள் அனைத்தையும் நீக்கிய சீவகன், நிலையாக இருக்கக்கூடிய பிறவாமை என்னும் நிலையை அடைந்ததும், என்றும் ஒளி குன்றாத சிந்தாமணியாக எப்பொழுதும் ஒளி வீசிக் கொண்டே இருக்கக்கூடிய நட்சத்திரமாக திகழ்ந்தார்.

🌟 சீவகனுடைய இந்த முடிவும், பாதையும் உலகில் நிலையற்றவற்றைப் பிரித்து நிலையானவற்றைப் பற்றிய தெளிவை மக்களுக்கு ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அறவழியில் நடக்கவும் பயணிக்கவும் செய்தது.

🌟 என்றும் சிந்தாமணியாக ஒளிர் வீசிக் கொண்டிருக்கக்கூடிய சீவகன் காட்டிய அறவழிப் பாதையில் இனி நாமும் பயணித்து நிலையானதை பெறுவோமாக.


Share this valuable content with your friends


Tags

பசு மாடு தாலிக்கயிறு மாற்ற உகந்த நாள் மற்றும் சிறந்த நேரம் எது? ஆண் வாரிசுக்கும்.. வாஸ்துவிற்கும்.. என்ன சம்பந்தம்? vilaku 08.10.2020 rasipalan in pdf format 25.04.2019 Rasipalan in pdf format!! வீடு கட்டும்போது.. வாஸ்து நிபுணரின் பங்கு எப்படியெல்லாம் இருக்கும்? வார ராசிபலன்கள் (13.05.2019 - 19.05.2019) PDF வடிவில் !! 25.12.2018 Rasipalan in PDF Format!! மதிப்பு அதிகரிக்கும் வலது கை துடிப்பதன் காரணம் என்ன? கார்ல் மார்க்ஸ் உலக தற்கொலை தடுப்பு தினம் ஐயப்பனுக்கு மாலை போட்டவர் எனக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நகையை கனவில் கண்டால் என்ன பலன் song 2023 ஏழரை சனி.! செருப்பு வாங்கி தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதுமண தம்பதிகள் கும்பாபிஷேகத்தை பார்க்கலாமா? dhinasari rasipalan in dpf format