சீவக சிந்தாமணி... துறவறம் செல்ல திட்டமிட்ட சீவகன்..!!
🌟 துறவியும் சிரித்து கொண்டே, உங்களை சரியான முடிவு எடுக்க வைப்பதற்கு தானே நான் இங்கு வந்திருக்கின்றேன் என்று கூறினார். பின் சீவகனிடமிருந்து விடைபெற்று சென்று விட்டார்.
🌟 இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த நந்தட்டன் சீவகனை பார்த்து, அந்த துறவியின் பேச்சுக்கு மதிப்பளித்து நீங்களும் அன்னையை போலவே துறவறம் மேற்கொள்ள போகின்றீர்களா? என்று கேட்டான்.
🌟 ஆமாம் நந்தட்டா! எனக்கு அடுத்து இந்த ராஜ்யத்தை ஆளும் பொறுப்பு உமக்கு தானே இருக்கிறது. அதனால் தான் உன்னிடம் ஒப்படைத்துவிட்டு செல்லலாம் என்று எண்ணுகிறேன் என்றான் சீவகன்.
🌟 சீவகனுடைய இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத நந்தட்டன், உங்களைவிட்டு என்னால் தனித்திருக்க முடியாது. துறவறம் மேற்கொள்வதாக இருந்தால் நானும் உங்களுடன் வருகிறேன் என்று அழுத்தமாக கூறினான்.
🌟 உடனே சீவகன், நீயும் என்னுடன் வந்துவிட்டால் மக்களின் நிலை என்னவாகும்? அரச பொறுப்புகளை யார் பார்த்து கொள்வார்? என்று கேட்டான்.
🌟 இதை பற்றி நண்பர்களிடம் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவினை எடுப்போம் என்றான் நந்தட்டன்.
🌟 பின் நந்தட்டனும், சீவகனும் அரண்மனைக்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் இருவரும் ஒரு வார்த்தைக்கூட பேசி கொள்ளாமல், ஒருவிதமான குழப்பத்துடனே சென்றார்கள்.
🌟 நண்பர்கள் அனைவருக்கும் சீவகன் துறவறம் மேற்கொள்வது தொடர்பான செய்திகள் ஒற்றர்களின் மூலம் அனுப்பப்பட்டன. இந்த செய்தியை கேள்விப்பட்ட நண்பர்கள் அனைவரும், திடீரென்று சீவகனுக்கு என்னவாயிற்று? என்று புரியாமல் அரச சபைக்கு வந்தனர்.
🌟 ஒரே நேரத்தில் நண்பர்கள் அனைவரும் அரச சபையில் கூடியிருப்பது அங்கிருந்த அனைவருக்கும் மிக பிரம்மிப்பாக இருந்தது. மேலும் இந்த திடீர் சந்திப்பு ஏதோ ஒரு மாற்றத்தினை நமது ராஜ்யத்தில் ஏற்படுத்த போகின்றது என்பதையும் புரிந்து கொண்டார்கள்.
🌟 மேலும் அரச சபைக்கு வந்த சீவகனின் நண்பர்களில் ஒருவர் கூட அவனுடைய முடிவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக அவனுடைய நண்பர்கள் அனைவரும், சீவகா! இப்பொழுது நீ துறவறம் மேற்கொள்வதற்கான அவசியம் ஒன்றும் ஏற்படவில்லை. நீ அரச பதவியில் இருந்து கொண்டே உன்னுடைய நற்பலன்களை அதிகப்படுத்தி கொள்ளலாமே! என்று கேட்டார்கள்.
🌟 அதற்கு சீவகன், என்னுடைய முடிவு துறவறம் செல்வது தான். இதில் எள்ளளவும் என்னால் மாற்றம் செய்ய இயலாது. மேலும் நான் இப்பொழுது வரை ஒருவிதமான சிறையில் இருப்பது போலவே உணர்கின்றேன். எனக்கு அதிலிருந்து விடுதலை வேண்டும். அதற்கு நான் துறவறம் தான் செல்ல வேண்டும் என்றான்.
என் அப்பாவிற்கு விபத்து ஏற்படுவது போலவும் ஜங்ஷன் எதிரி எனக்கு திருநீறு பூசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மிதுன லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?. வெற்றி நான் ரிஷப லக்னம். 6-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? வார ராசிபலன் (10.08.2020 -16.08.2020) PDF வடிவில் !! வரலாற்றில் இன்று தேர்வு குழந்தை நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருநள்ளாறு சனீஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபடலாமா? புரட்டாசி மாதம் குலதெய்வக் கோவிலில் ஆடு பலியிட்டு கிரிராஜன் 03.12.2018 Rasipalan in PDF Format !! இளநீரை வெட்டி அருந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வைகாசி மாதம் ஜாதகம் பார்க்கலாமா? நாய் துரத்துவது போல் கனவு தினசரி ராசிபலன்கள் (10.03.2020) 27.09.2018 Rasipalan in PDF Format!! உலக தம்பதியர் தினம்