No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்கிரமாதித்தன் கதைகள்... குருவை கவர்ந்த ராமு... சுயநலமா? பொதுநலமா?

Feb 28, 2023   Ramya   111    விக்ரமாதித்தன் கதைகள் 


விக்ரமாதித்தனிடம் வேதாளம் கதை சொல்லத் தொடங்கியது.

விஜயபுரியில் ரத்னாகரன் என்ற பணக்கார வியாபாரிக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர்களில் மூன்றாவது பிள்ளையான ராமுவிற்கு இயற்கையிலேயே மிகவும் தயாள குணம். தன்னை நாடி யார் எந்த உதவி கேட்டாலும் உடனே செய்வான். ராமுவின் குணத்தை நினைத்து அவரின் தந்தை மிகவும் கவலைப்பட்டார்.

ஒருநாள் ரத்னாகரன் தன் நெருங்கிய நண்பரிடம் ராமுவைப் பற்றி கூறினார். அதற்கு அவர் என்னுடைய பெண்ணை ராமுவிற்குத் திருமணம் செய்து கொடுத்தால், அவள் அவனை மாற்றி விடுவாள் என்றார். நண்பருடைய யோசனையை ஏற்று ராமுவின் திருமணம் இனிதே நடைபெற்றது. ஒருநாள் ராமுவின் மனைவி அவனிடம், உங்கள் உதவியை மற்றவர்கள் சரியானபடி பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றினால், நீங்கள் தானம் செய்யுங்கள் என்றாள்.

இதைக்கேட்ட ராமு, தான் உதவியவர்களின் வீடுகளுக்கு சென்று பார்த்தான். ஆனால், தன்னிடம் உதவி பெற்றவர்கள் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்பதை தெரிந்து கொண்டான். தன் மனைவியிடம் இனி நான் செய்யும் உதவி மற்றவர்களுக்குப் பயன்படும்படி இருக்க வேண்டும் என்றான். அதற்கு அவள், மருத்துவத் தொழில் மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்யலாம் என்றாள்.

உடனே ராமு வேதாரண்யத்தில் வைத்தியானந்தா என்ற யோகியிடம் சீடனானான். ஒரே ஆண்டில் அவனுக்கு மருத்துவத்தை கற்பித்த யோகி, அவனிடம் நீ நேர்மையான மருத்துவனாகத் திகழ்ந்தால், என்னிடம் உள்ள மந்திர ஓலைச்சுவடிகளை உனக்குத் தருவேன் என்று கூறி அனுப்பினார்.

ராமு தன் மருத்துவத் தொழிலை புனித தொண்டாகக் கருதி செய்தான். ஓராண்டிற்குப் பிறகு, ஒரு சன்னியாசி அவன் வீட்டிற்கு வந்தார். வீட்டின் வாசலில் நின்றுகொண்டு, ராமு மருத்துவம் செய்யும் விதத்தை கூர்ந்து கவனித்தார். சுயநலம் சிறிதுமின்றி, ராமு தொழில் புரிந்த விதம் சன்னியாசியை மிகவும் கவர்ந்தது. மந்திரங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளைப் பெற நீ தகுதியாகிவிட்டாய். உடனே வேதாரண்யம் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்! என்றார். ஆனால் ராமு, தன்னை நாடி தினமும் நோயாளிகள் வருகிறார்கள், நான் இங்கு இல்லையென்றால் அவர்கள் வருந்துவார்கள் என்று கூறி, மந்திர ஓலைச்சுவடிகளை வாங்கச் செல்ல மறுத்து விட்டான்.

ராமுவின் மனைவி கணவனின் முடிவை நினைத்து வருத்தமுற்று, சன்னியாசியிடம் யோசனை கேட்டாள். அவரின் யோசனைப்படி ராமுவின் மனைவி நோய்வாய்ப்பட்டது போல் பாசாங்கு செய்தாள். சன்னியாசி ராமுவை அழைத்து, உன் மனைவியின் நோய் மருந்தினால் தீராது மந்திரத்தினால் தான் தீரும்! இப்போதாவது உன் குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெற்று வா! என்றார்.

உடனே ராமுவும் குருவிடமிருந்து ஓலைச்சுவடிகளை வாங்கி வந்தான். அவற்றைக் கற்றுத் தேர்ந்து, தன் மனைவியின் நோய்க்கு மந்திரம் ஓத, அவளும் குணமானது போல் நடித்தாள். அன்று முதல் ராமு மருந்தினால் தீராத நோய்களையும் மந்திரத்தினால் தீர்த்து வைத்து, அந்தப் பகுதியில் தலைசிறந்த வைத்தியனாகத் திகழ்ந்தான் என்று கூறி கதையை முடித்தது.

வேதாளம், விக்ரமாதித்தனை பார்த்து, மன்னா! சன்னியாசி, பலமுறை குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெற்றுக் கொள்ளச் சொல்லியும் போகாதவன், தன் மனைவிக்காக தனது கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டான். சுயநல நோக்கம் இன்றி நேர்மையாக மருத்துவத் தொழில் செய்தால் மட்டுமே ஓலைச்சுவடிகளைத் தருவேன் என்று சொல்லிய அவன் குரு அவனுக்கு அவற்றை எப்படித் தந்தார்? என்று கேட்டது.

அதற்கு விக்ரமாதித்தன், ராமுவை சுயநலக்காரன் என்று சொல்வது முற்றிலும் தவறு. நோயாளியை குணப்படுத்துவது ஒரு மருத்துவரின் கடமை. எனவே, தன் மனைவியைக் குணப்படுத்த, அவன் குருவிடம் சென்றது ஒரு போதும் தவறு ஆகாது. ராமுவின் நேர்மையை நன்கு அறிந்ததால் தான் குருவும் சிறிதுகூட தயக்கமின்றி ஓலைச்சுவடிகளை அவனுக்கு அளித்தார் என்றான்.


Share this valuable content with your friends


Tags

மற்றவர்களை குறைத்து தன்னை முன்னிலைப்படுத்தி பேசக்கூடியவர்கள் இவர்கள்தான் puthan பிரெஞ்சு கணிதவியலாளர் அறிவுசார் சொத்துரிமை தினம் மே 28 பூஜையறையும் karththikai தேவர்களின் வருகை மாடுகளை கனவில் கண்டால் என்ன பலன்? தெற்கு திசை வீடும் வாஸ்து குறைகளும் !! ஆஞ்சநேயரை கனவில் கண்டால் என்ன பலன்? குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்? பாப்லோ பிக்காசோ வளர்பிறை சதுர்த்தி வில்லியம் பெண்டிங் பிரபு குலதெய்வ வழிபாடு பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோபத்தை கட்டுப்படுத்த தெரியாதவர்கள் இவர்களே! பாதகாதிபதி வலிமை பெற்றால் என்ன பலன்? நட்சத்திரம் உடைய ஆண்