No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - போட்டிக்கு தயாரான சீவகன்..!!

Feb 22, 2023   Ramya   168    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... போட்டிக்கு தயாரான சீவகன்..!!

🌟 பின்பு தனது அருகில் இருப்பவர்களிடமும், அமைச்சர்களிடமும் யார் அந்த வாலிபன்? என்னைவிட அவனுக்கு என்ன அவ்வளவு திறமைகள் இருக்கின்றதா? நான் பல நாட்கள் முயன்றும் வசியம் செய்ய முடியாத அனங்கமாலையை ஒரு நொடி பொழுதில் அவனுக்கு உரியவளாக மாற்றி விட்டானே. எப்படி அவனால் மட்டும் முடிந்தது? என்று கோபத்தில் ஏதேதோ கூறி கொண்டே இருந்தான்.


🌟 மன்னருடைய கோபத்தை கண்டு பயந்த அவன் அருகில் இருந்தவர்களும், அமைச்சர்களும் சீவகனை பற்றிய எந்தவிதமான உண்மைகளையும் சொல்ல முடியாமல், தைரியம் இல்லாத கோழைகளான அமைச்சர்கள் அவன் அவ்வளவு பெரிய திறமைசாலி ஒன்றும் கிடையாது மன்னா. அவன் சாதாரண ஒரு வில்வீரன் மட்டும் தான்.. பார்ப்பதற்கு ஏதோ அழகாக இருக்கின்றான்.. அதனால் தான் அவனை அவளுக்கு ரொம்ப பிடித்து விட்டது போல என்று கூறி மன்னருடைய கோபத்தை சமாளிக்க துவங்கினார்கள்.

🌟 இந்த நிகழ்வில் இருந்து கட்டியங்காரனுக்கு ஒரு உண்மை தெளிவாக புரிந்து விட்டது. இவனை வளர விட்டால் தன்னுடைய ஆட்சிக்கு இவன் பாதகம் செய்து விடுவான் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டான்.

🌟 உடனே மதனனை அழைத்து இந்த போட்டிக்கு அவன் கண்டிப்பாக வருவான். ஒருவேளை அவன் இந்த போட்டியில் ஈடுபட்டால் அவன் வெற்றி அடையக்கூடாது. ஒருவேளை அவன் வெற்றியடைந்து விட்டால் அவன் உயிருடன் இந்த இடத்தினை விட்டு திரும்பி செல்லக்கூடாது. அதற்கு தகுந்த விதத்தில் ஏற்பாடுகளை செய்துவை என்று கட்டளையிட்டிருந்தான்.

🌟 கட்டியங்காரன் மதனனிடம் பேசி கொண்டிருந்ததை சாமரம் வீசி கொண்டிருந்த நாகமாலை கேட்டதும் சீவகனை எண்ணி மிகுந்த அச்சம் கொண்டாள்.

🌟 அங்கு சீவகனின் நண்பர்கள் பலர் போட்டியில் நிகழ்ந்த நிகழ்வுகளை பற்றி ஒருவருக்கொருவர் பேசி கொண்டும், புன்னகைத்து கொண்டும் இருந்தனர். அதாவது, ஒரு பெண்ணிற்கு தகுந்த சரியான வரன் நமது நாட்டில் இல்லையா என்றும், அந்த பெண் மணமகனே கிடைக்காமல் தனியாக தத்தளித்து கொண்டிருக்கின்றாள் என்றும் பேசி கொண்டிருந்தனர்.

🌟 இன்னொரு நண்பனோ, ஏன் இல்லை? அவளுக்கானவன் இங்கே தான் இருக்கின்றான். இவன் தானே செல்ல மாட்டேன் என்று கூறி கொண்டிருக்கின்றான். இவன் சென்றால் தானே நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த அவநிலையை நீக்க முடியும் என்று கூறினான்.

🌟 யாழிசை போட்டியில் நடைபெற்ற அனைத்து விபரங்களையும் நண்பர்கள் மூலமாக சீவகன் அறிந்து கொண்டான். காந்தருவதத்தையை மணக்க வேண்டும் என்ற ஆசை அவனிடத்தில் இல்லை. ஆனால் நம்முடைய நாட்டை நம்பி வந்த அன்னிய நாட்டு பெண்ணிற்கு ஏற்பட்டு உள்ள இந்த நிலையை எண்ணியும், அவன் மனதளவில் நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை எண்ணியும் கவலை கொண்டான்.

🌟 தன்னுடைய நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த களங்கத்தை போக்குவதற்காக காந்தருவதத்தையுடன் அந்த யாழிசை போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தான். போட்டியில் கலந்து கொள்ள தன்னுடைய தந்தையிடம் அனுமதி பெற்று வருமாறு தன் நண்பர்களில் திறமை மிக்க புத்திசேனனை அனுப்பி வைத்தான்.


🌟 கந்துக்கடன் போட்டியை காண செல்வதற்காக தயாராக இருந்தார். ஆனால் அவருடைய மனைவி தயாராவதற்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டு கொண்டிருந்தது. நீ தயாராகி வருவதற்குள் போட்டியே முடிந்துவிடும் என்று எண்ணுகின்றேன். சீக்கிரம் வருவாயாக என்று மனைவியிடம் கூறி கொண்டிருந்தார்.

🌟 அந்த சமயத்தில் தான் புத்திசேனன் சீவகனின் வீட்டை அடைந்தான். அவனுடைய தந்தையை பார்த்த வண்ணமாக, தந்தையே எப்படி இருக்கின்றீர்கள்? நன்றாக இருக்கின்றீர்களா? என்று வினவினான்.

🌟 அதற்கு கந்துக்கடன், வா புத்திசேனா! பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. நான் நலமாக தான் இருக்கின்றேன். நீ ஏன் இன்னும் போட்டிக்கு செல்லவில்லை? என்று கேட்டார்.

🌟 யாழினை பற்றியும், நடனத்தை பற்றியும் எனக்கென்ன தெரியும். இதுவே வாளை பற்றி நடைபெறும் போட்டியாக இருந்தால் இந்நேரம் நான் அங்கல்லவா இருந்திருப்பேன். இங்கு உங்களுடன் பேசி கொண்டிருப்பேனா? என்றான்.

🌟 அதுவும் சரிதான். இரும்பு கடையில் ஈ-க்கு என்ன வேலை இருக்கின்றது? என கூறி இருவரும் சிரித்து கொண்டிருந்தனர்.

🌟 தந்தையே உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்லலாம் என்று வந்திருக்கின்றேன் அந்த விஷயத்தை சொல்லலாமா? என்று புத்திசேனன் கேட்டான்.

🌟 புத்திசேனன் சொல்ல வந்ததை சொல்லாமலேயே இருந்தான். அதற்கு, சொல்வது என்று முடிவெடுத்த பின்பு தான் என்னை காணவே வந்து இருக்கின்றாய். அதற்கு பின் என்ன சொல்லலாமா? என்ற ஒரு கேள்வி? தைரியமாக சொல். நான் என்ன சொல்ல போகிறேன் என்றார் கந்துக்கடன்.

🌟 சீவகன் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விருப்பப்படுகின்றோம். ஆனால் சீவகனோ ஒரு பெண்ணிற்காக இந்த போட்டியில் கலந்து கொள்வதா? என்று ஒரே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றான்.

🌟 ஆனால் நாங்களோ இது உன்னுடைய திறமைக்கான போட்டி. இதில் உன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறு. பின்பு வெற்றி பொருளான அந்த நங்கையை பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினோம்.

🌟 அப்படி கூறியும் அவன் அந்த போட்டியில் கலந்து கொள்ள ஏதோ தயக்கம் கொள்கின்றான். அதனால் தான் உங்களிடம் கேட்டு அனுமதி பெற்று பிறகு அவனை போட்டியில் கலந்து கொள்ள வைக்கலாம் என எண்ணி நான் இங்கு வந்திருக்கின்றேன் என்று தன் மனதில் தோன்றியதை சாதுர்யமாக தந்தையிடம் கூறினான்.


🌟 ஓ... அப்படியா செய்தி. சீவகனுக்கு யாழில் நல்ல பயிற்சியும், திறமையும் இருக்கின்றது. அவனிடத்தில் இனிமையான குரல் வளமும் இருக்கின்றது. முருங்கை முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே தீர வேண்டும்.

🌟 அப்படி இருக்கும் பொழுது என்ன பதற்றம். தைரியமாக... என்று சொல்லி கொண்டு இருக்கும் பொழுதே திடீரென்று நாகமாலை மிகுந்த பதற்றத்தோடு கந்துக்கடனை பார்ப்பதற்காக அவன் வீட்டிற்கு வந்தாள்.


Share this valuable content with your friends


Tags

ஆவணி மாதத்தில் புதிய தொழில் தொடங்கலாமா? சுக்கிரன் மற்றும் சூரியன் 5ல் இருந்தால் என்ன பலன்? தங்கம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்ன கோலம் போட்டால்... என்ன பலன் கிடைக்கும்? காது குத்தலாமா? சர்வதேச சகிப்புத்தன்மை தினம் today rasipalan 02.04.2020 in pdf format என் மீது வெறுப்பு சத்யஜித் ராய் ஏப்ரல் மாத வரலாற்று நிகழ்வுகள் சந்திர திசை நடந்தால் என்ன எனக்கும் இன்னொரு பெண்ணால் சண்டை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? kanvau தேய்பிறையில் திருமணம் செய்யலாமா? 7ம் வீட்டில் ராகு பணத்தை கனவில் கண்டால் என்ன பலன்? மலையத்துவச பாண்டியன் விண்ணுலகம் விடுத்து மண்ணுலகம் வரல் ஓடும் தண்ணீரை கனவில் கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் (16.11.2022) arasa maram