விக்ரமாதித்தனிடம் வேதாளம் கதை சொல்ல துவங்கியது.
பர்வதபுரம் என்ற ஊரில் அன்பே வடிவமாக ஒரு அண்ணன், தங்கை இருந்தனர். அவர்களுக்கு பெற்றோர் இல்லை.
தங்கையின் திருமண வயது நெருங்கிய போது தனது தங்கையின் ஜாதகப்படி, அவளுக்கு திருமணம் ஆகி ஒரு வருடத்திற்கு பிறகு அவளது கணவன் உயிர் போய்விடும் என்பது அவளது விதி என்பதை அறிந்து பேரதிர்ச்சி அடைந்தான்.
அடுத்து என்ன செய்வது என புரியாமல் தடுமாறினான். பார்வதி பரமேஸ்வரனின் திருக்கோவிலுக்கு சென்று, தாயே! இதுநாள் வரையில் நானும் எனது தங்கையும் உங்களையே, எங்களது பெற்றோராக கருதி வளர்ந்து வந்தோம்.
அது உண்மையெனில், எனது தங்கையின் திருமணம் ஆனது நல்லபடியாக நடந்தாக வேண்டும். என் தங்கையின் கணவன் உயிரானது ஒரு வருடத்திற்கு பிறகு பிரியக்கூடாது. அதற்கு பதிலாக எனது உயிரை நான் அளிக்கின்றேன் என்றான்.
அவன் கோவிலை விட்டு வெளியில் வந்த அடுத்த கணமே, அவனது தங்கையை பெண் பார்க்க வந்து, திருமணமும் முடிவானது. இதனால் மிகுந்த ஆனந்தத்தில் திளைத்தான்.
திருமணத்திற்கு பிறகு தங்கையும், அவளது கணவனும் அண்ணனை பார்க்க பர்வதபுரத்திற்கு வந்தனர். அண்ணன் இருவரையும் சிறப்பாக கவனித்தான். அன்று இரவு தூங்கும் பொழுது, அண்ணனின் கனவில் பார்வதி தேவி தோன்றினாள்.
அவனை பார்த்து கொடுத்த வாக்கினை மறந்து இப்படி தூங்குகிறாயே! இது தர்மமா? என கேட்டாள்.
மறுநாள் காலைப்பொழுதில், மூவரும் கோவிலுக்கு சென்று பார்வதி பரமேஸ்வரனை வணங்கிய பின்னர் வெளியில் வந்தனர். அப்போது அண்ணன், கோவிலில் தனது உடைவாளை மறந்து வைத்துவிட்டு வந்ததாகவும், அதனை எடுத்து வருகிறேன் என கூறி உள்ளே சென்றான்.
தான் கொடுத்த வாக்கினை நிறைவேற்ற, தனது வாளினால் தனது தலையை தனியாக வெட்டிக்கொண்டு இறந்து போனான்.
நீண்ட நேரமாகியும், அண்ணன் வெளியில் வராததை கண்டு தங்கை பயந்து போக, அவளது கணவன் நான் சென்று அழைத்து வருவதாக கூறி உள்ளே சென்றான்.
உள்ளே வந்தவன், தனது மச்சான் தலைவேறு, உடல்வேறாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போனான்.
இதனை தனது மனைவியிடம் எவ்வாறு சொல்வது என புரியாமல் அங்கிருந்த வாளினால் தனது தலையினை வெட்டிக்கொண்டு இறந்தான்.
தனது அண்ணனும், கணவனும் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததை கண்டு, பயந்துபோன தங்கை கோவிலுக்கு உள்ளே சென்றாள்.
அங்கு இருவரும் தலைவேறு, உடல்வேறாக கிடப்பதை கண்டு அதிர்ந்துபோன அவள் தானும் இனி வாழப்போவதில்லை என முடிவெடுத்தாள். பின்னர், அங்கிருந்த வாளினை எடுத்து தனது தலையை துண்டிக்கப்போனாள்.
அப்பொழுது பார்வதி தேவியானவள், நேரில் தோன்றி நீங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பினை கண்டு வியந்துபோனேன். நீ கவலைக் கொள்ளாதே! இப்பொழுது நடந்த இந்த நிகழ்வானது முன்பே நிச்சயிக்கப்பட்டது.
இதோ இந்த தண்ணீரை அவர்களின் கழுத்தில் தடவி தலையினை சேர்த்து வை. இரண்டு துண்டுகளாக இருக்கும் உடல் ஒன்றாக மாறும் என்று கூறி மறைந்தாள்.
இதனைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த தங்கை, பதற்றத்தில் அண்ணன் உடலோடு கணவனின் தலையையும், கணவனின் உடலோடு அண்ணனின் தலையையும் சேர்த்து வைத்து உயிர்பெற செய்தாள்.
இருவரும் உயிர் பெற்று எழுந்தனர். இருவரது உடல்களும் மாறிப்போனதை கண்டு அதிர்ச்சியடைந்தாள்.
விக்ரமாதித்தா தங்கையானவள் இப்பொழுது உடல்கள் மாறிப்போன இருவரில் யாரை கணவனாக ஏற்பாள்? என கேட்டது வேதாளம்.
அவள் தனது கணவனின் தலை பொருந்திய அண்ணனின் உடலை கொண்டவனையே கணவனாக ஏற்பாள். காரணம், ஒருவரின் மூளையே, அனைத்து நினைவுகளையும் கொண்டிருக்கும் என்றான்.
எங்கு மாடிபடி அமைப்பு வந்தால் என்ன பலன்? மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்றவேண்டும் ஏழுமலையான் நவம்பர் 22 உத்திரம் தை மாதம் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆணிற்கு பெண் கொடுத்தால் பெண்ணின் தந்தை இறந்து விடுவார் என்று கூறுவது உண்மையா குலதெய்வ அருள் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? யார் என்று தெரியாத நபர் இறந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? oorai ஆண் பல திருமணங்களை செய்து rasaipalan in pdf format 26.06.2019 Bhagavan பிரம்மதேவர் தினசரி ராசிபலன்கள் (19.03.2020) சூரியன் பழைய பேப்பர்களை கிழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ராகுகேது பெயர்ச்சி பலன்கள் PDF வடிவில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே ராசியாக இருக்கலாமா?