1. வளர்பிறை பஞ்சமி திதியில் இறந்தவருக்கு, தேய்பிறை பஞ்சமி திதியில், திதி கொடுக்கலாமா?
🌟 வளர்பிறை பஞ்சமி திதியில் இறந்தவருக்கு, தேய்பிறை பஞ்சமி திதியில், திதி கொடுக்கக்கூடாது. அவர் இறந்த வளர்பிறை பஞ்சமி திதியில், திதி கொடுக்க வேண்டும்.
🌟 தவிர்க்க முடியாத சூழலாக இருக்கும் பட்சத்தில் வளர்பிறை பஞ்சமி திதியில் இறந்தவருக்கு, தேய்பிறை பஞ்சமி திதியில் திதி கொடுக்கலாம்.
2. கோவிலுக்குள் கூட்டமாக இருந்தால் தரிசனம் செய்யாமல் திரும்பி வரலாமா?
🌟 கோவிலுக்குள் கூட்டமாக இருந்தால் தரிசனம் செய்யாமல் திரும்பி வருதல் என்பது நல்லதல்ல. இறைவனை தரிசிக்க சென்று இறைவனை தரிசித்து வருவது நற்பலனை அளிக்கும்.
3. மீன ராசிக்கான வீட்டு நிலைவாசல் கதவு எந்த பக்கம் இருக்க வேண்டும்?
🌟 மீன ராசிக்கான வீட்டு நிலைவாசல் கதவு வடக்கு திசையை நோக்கி இருக்கலாம்.
🌟 லக்னத்தை கொண்டு வீட்டின் நிலைகளில் நிலைவாசல் அமைப்பது சிறந்த பலனை அளிக்கும்.
4. எனக்கு மிதுன ராசி, என் மனைவி விருச்சிக ராசி. இருவருக்கும் எப்போதும் பிரச்சனையாகவே உள்ளது. இதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா?
🌟 கணவன் - மனைவி இடையே ஒற்றுமை ஓங்க திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர நன்மைகள் உண்டாகும்.
5. ஆண், பெண் குழந்தை பிறக்கக்கூடாத நட்சத்திரம் என்ன?
🌟 குழந்தைகள் பிறக்க எல்லா நட்சத்திரங்களும் உகந்த நட்சத்திரங்கள் ஆகும். அவரவர் செய்யும் கர்ம வினைக்கு ஏற்பவே அவர்களின் பிறப்பும் நிர்ணயிக்கப்படுகின்றன.
🌟 இதில் உகந்த நட்சத்திரம், உகந்தாத நட்சத்திரம் என்று எந்த நட்சத்திரத்தையும் நம்மால் ஒதுக்க இயலாது.
🌟 ஆகவே, அனைத்து நட்சத்திரங்களிலும் ஆண், பெண் குழந்தைகள் என பேதமின்றி பிறக்கலாம்.
6. செய்வினைக்குரிய பரிகாரம் என்ன?
🌟 காலபைரவரை வணங்கி, திரிசூலத்தில் எலுமிச்சைப்பழத்தை குத்தி வழிபட்டு வருவது செய்வினை மற்றும் திருஷ்டி தோஷங்களை போக்கும்.
🌟 கொல்லிமலையில் உள்ள கொல்லிப்பாவை ஆலயம் சென்று செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வழிபட்டு வந்தால் செய்வினை தோஷங்கள் நீங்கும்.
7. அமாவாசை அன்று பெண் குழந்தை பிறப்பது நல்லதா?
🌟 அமாவாசை அன்று பெண் குழந்தை பிறக்கலாம்.
🌟 குழந்தை பிறப்பிற்கு லக்னம் மட்டுமே முதன்மையானதாகும்.