விக்ரமாதித்தனிடம் வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது.
👻 ஒரு ஊரில் திவாகரன் என்ற செல்வந்தனுக்கு கலா என்ற ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு மாப்பிள்ளை தேட தொடங்கினார் அவள் தந்தை திவாகரன். ஏதோ ஒரு காரணத்தால் சரியான வரன் அமையாமல் தள்ளி கொண்டே போனது. இதனால் தன் சகோதரனான கோபியின் உதவியை நாடினாள் கலாவின் தாய். கோபி ஒரு புகழ்பெற்ற ஜோதிடரான கௌசிகனிடம், கலாவின் திருமண யோகத்தைக் குறித்து கேட்டான்.
👻 கலாவின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்த கௌசிகன் கலாவின் ஜாதகம் சாட்சாத் அந்த சீதா தேவியின் ஜாதகத்தை ஒத்திருப்பதாகவும், அந்த சீதையை போலவே அவள் சிறிது காலம் துன்பம் அனுபவிப்பாள், ஆனால் இறுதியில் எல்லாம் நன்மையாக முடியும் என்று கூறினார். மேலும் ஜெய்புரி என்ற ஊரிலுள்ள ராமர், சீதை கோவிலுக்கு சென்று தரிசித்து, அங்கு தரப்படும் பிரசாதத்தை கலா தன் கையால் ஒரு உத்தமனுக்கு தந்தால், அவள் திருமணம் நடைபெறும் என்று கூறினார்.
👻 கௌசிகன் கூறியது போல ஜெய்புரியில் உள்ள வீரபத்திரன் என்ற உத்தமனுக்கு பிரசாதம் வழங்கி, பரிகாரம் நிறைவேற்றப்பட்டது. தங்கள் மகன் வீரபத்திரனுக்கு, கலாவை திருமணம் செய்ய பெண் கேட்டனர் வீரபத்திரனின் பெற்றோர். இருவரின் ஜாதகத்தையும் ஆராய்ந்த ஜோதிடர் கௌசிகன், இருவருக்கும் திருமணம் செய்யலாம் என்று கூறினார்.
👻 மறுநாள் அதிகாலை அருகிலிருந்த குளத்தில் நீராடச் சென்றார் கௌசிகன். அப்போது அங்கிருந்த மரத்திலிருந்து ஒரு பூதம் கௌசிகனை வழிமறித்து, உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியது. இதை கண்டு சிறிதும் அஞ்சாத கௌசிகன் நீ ஏதோ ஒரு சாபத்தின் காரணமாகவே இவ்வாறு பூதமாக அலைகிறாய், அந்த சாபம் தீருவதற்கான வழியை நான் உனக்கு கூறுகிறேன் என்று அப்பூதத்திடம் கூறினார்.
👻 நீ ஒரு பழத்தை கையில் வைத்து ஒரு மந்திரத்தை கூறினால், அந்த பழம் சக்தி பெரும், அப்படி சக்தி பெற்ற பழத்தை, ஒரு குழந்தை பாக்கியமற்ற புண்ணியவதியான பெண்ணுக்குத் தந்தால், உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் அதற்கு சிறிது காலம் நீ பொறுத்திருக்க வேண்டும் என கூறினார்.
👻 கலா, வீரபத்திரன் திருமணம் முடிந்து மூன்றாண்டுகள் இல்லற வாழ்க்கைக்கு பின்பும் கலாவிற்கு, குழந்தை பேறு கிட்டவில்லை. இதனால் வீரபத்திரனின் பெற்றோர்கள், அவர்களின் ஒரு உறவுக்காரப் பெண்ணை வீரபத்திரனுக்கு இரண்டாம் திருமணம் செய்ய முயற்சித்தனர்.
👻 அப்போது அங்கே வந்த கௌசிகன் அப்பூதத்திடம் ஒரு புண்ணியவதிக்கு கொடுக்க இப்போது மந்திர சக்தி ஏற்றப்பட்ட பழத்தை தருமாறு கேட்டான். அதன் படியே அப்பழத்தை கொடுத்த பூதம், சாப விமோசனம் கிடைத்து மறைந்தது. அந்த பழத்தை சாப்பிட்ட கலா, இரண்டு மாதங்களில் கருத்தரித்து, பத்து மாதம் கழித்து ஒரு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
👻 விக்ரமாதித்தா கௌசிகன் நினைத்திருந்தால் எப்போதோ அந்த பூதத்திடம் அப்பழத்தை பெற்று, கலாவின் குறையைத் தீர்த்திருக்கலாம். அவளையும், பூதத்தையும் இவ்வளவு காலம் தவிக்கவிட்டது ஏன்? என்று கேட்டது வேதாளம்.
👻 கௌசிகன் ஒருவரின் விதியை கணிக்கும் ஜோதிடனே தவிர, அவர்களின் விதியை தீர்மானிக்கும் கடவுளல்ல. கலாவின் ஜாதகப்படி அவளுக்கு மூன்றாண்டுகள் கழித்து குழந்தை பிறக்கும் என்பது விதி. அதனால் மூன்றாண்டுகள் வரை காத்திருந்தான். அது போலவே அப்பூதத்திற்கும் மூன்றாண்டுகள் கழித்தே சாப விமோசனம் கிடைக்கும் என்று கௌசிகன் கணித்திருந்தான்.
👻 எனவே இருவரையும் தவிக்க விடுவதற்காக எடுக்கப்பட்ட முடிவல்ல, மாறாக இருவருக்குமே நன்மை ஏற்பட, நன்கு ஆலோசித்து கௌசிகன் எடுத்த முடிவு என்று பதிலளித்தான் விக்ரமாதித்தன்.
கன்னி ராசி பலன்கள்.! சிவபுராணம் பிறகு அது இறப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? குலச்சிறை ஆவணி மாதம் தனி குடித்தனம் போகலாமா? ரிஷப லக்னத்தில் சுக்கிரன் daily rasipalan in pdf format சிவபெருமான் சந்திரன் மீது கோபம் அடைந்து போர் தொடுத்தல் 14-11-2021 Rasipalan pdf ராம்தாரி சிங் தின்கர் kala sarppa dhosham கிணற்றிலிருந்து பால் பொங்கி வழிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பலன் நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்? cithirai நினைத்த எண்ணங்கள் நிறைவேறும் வரை போராடக்கூடியவர்கள்... யார் இவர்கள்? சூழ்ச்சி செய்த கட்டியங்காரன் சிவன் சிலையின் தலையில் நீருக்கு பதில் நெருப்பு குழம்பு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வடமேற்கு 23.07.2021 Rasipalan in PDF Format!!