1. எந்தெந்த திதியில் கல்வி கற்பதற்கான செயல்களை தொடங்கலாம்?
💐 துவிதியை, திரிதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி ஆகிய திதிகளில் கல்வி கற்பதற்கான செயல்களை தொடங்கலாம்.
2. சந்திர ஓரையில் என்னென்ன செயல்களை செய்யலாம்?
💐 சந்திர ஓரையில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது போன்ற செயல்களை செய்யலாம்.
3. பவ கரணத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
💐 தைரியத்துடன் செயல்பட கூடியவர்கள்.
💐 பெருந்தன்மையான குணங்களை கொண்டவர்கள்.
💐 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. சதுர்த்தசி திதிக்கான சூன்ய ராசிகள் என்ன?
💐 சதுர்த்தசி திதிக்கான சூன்ய ராசிகள் என்பது மிதுனம் மற்றும் தனுசு ஆகும்.
5. கையில் சனி மேடு உயர்ந்து இருந்தால் என்ன பலன்?
💐 கையில் சனி மேடு உயர்ந்து இருந்தால் எதிலும் பொறுமையுடனும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
6. ஆணின் இடது உள்ளங்காலில் மச்சம் இருந்தால் என்ன பலன்?
💐 எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுபவர்கள்.
💐 அதிகம் சோர்வடைய கூடியவர்கள்.
💐 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
7. இருதய ரேகையின் பலன்கள் என்ன?
💐 ஒருவருடைய இருதய ரேகையின் மூலமாக அவர் உணர்ச்சிவசப்படும் தன்மை மற்றும் தொழில் சார்ந்த நிலைகளை அறிந்து கொள்ள முடியும்.