1. யாரென்று தெரியாத ஒரு குழந்தை தொட்டிலில் ஆடுவது போலவும், பின்பு அந்த குழந்தையை நான் வெளியே போ என்று சொல்வது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் சாதகமான பலன்களும் உண்டாகும்.
2. யாரோ இருவர் உடன் இருப்பது போலவும், அவர்களை ஏன் இங்கு இருக்கிறீர்கள் என்று திட்டும் போது பின்னிருந்து யாரோ என் காலை பிடித்து இழுப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உங்களை வருத்திக்கொண்டிருந்த சில விஷயங்களில் தெளிவு உண்டாகும்.
🌟 மேலும், உடன் இருப்பவர்களை பற்றி அறிந்துக்கொள்வீர்கள்.
3. பயணம் செய்யும் போது பெட்டியுடன் பணம் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 பயணம் செய்யும் போது பெட்டியுடன் பணம் காணாமல் போவது போல் கனவு கண்டால் பொருளாதார சிக்கல்கள் குறையும்.
4. நிறைய பாம்புகளை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 நிறைய பாம்புகளை கொல்வது போல் கனவு கண்டால் எதிர்ப்புகள் குறையும்.
5. குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்வது போல் கனவு கண்டால் நல்லதாகும்.
🌟 நினைத்த காரியம் விரைவில் ஈடேறும்.