No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - எழில் மிகுந்த ஏமாங்கத நாடு...!!!

Jan 30, 2023   Nandhini   152    சீவக சிந்தாமணி 



காப்பியம்:

📚 காப்பியம் என்பது பல கருத்துக்களை ஒருங்கிணைத்த வாழ்க்கைக்கு தேவையாக இருக்கக்கூடிய அறம், பொருள், இன்பம், வீடு முதலியவற்றை இலக்கிய நயத்துடன் எடுத்து உரைக்கும் வடிவங்களில் ஒன்றாகும்.

📚 ஐம்பெரும் காப்பியங்களாக கூறப்பட்டுள்ள அனைத்து நூல்களின் பெயர்களும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பயன்படுகின்ற ஆபரணங்களின் தொகுப்பாகவே கூறப்பட்டிருக்கும்.

📚 வாழ்வில் மாற்றம் என்பது மாறாத ஒன்றாகும். அந்த மாற்றம் யார் மூலமாக ஏற்படுகிறது என்பதை பொறுத்து ஒருவரின் வாழ்க்கையில் பல திருப்பங்களும், யாவரும் எதிர்பாராத திடீர் மாற்றங்களும் ஏற்படுகின்றன.

📚 பல திருப்பங்கள் நன்மையில் முடிந்தாலும், சில திருப்பங்கள் பலருக்கு எடுத்துரைக்கும் மாற்றமாகவோ, கதைகளாகவோ திரும்பி எதிர்காலத்தினை பார்க்கின்றது.

📚 தலைவனின் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்குவதில் தலைவியின் பங்கு என்பது முதன்மையாக இருக்கிறது. தலைவி இல்லையேல் தலைவனும் இல்லை. சுருங்கச் சொல்ல போனால், சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது போல தான்.

📚 ஒவ்வொரு காப்பியங்களிலும் தலைவனுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய தலைவியின் மூலமாகவே அனைத்து மாற்றங்களும், வாழ்வியல் இயக்கங்களும், இன்பத்தின் நுகர்வுகளும், மோட்சத்தின் வழித்தடங்களும் பிறக்கின்றன என்பதை மறைமுகமாக எக்காலத்திலும் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அக்காலத்தில் அதாவது, சங்க காலத்தில் வாழ்ந்த சான்றோர் பெருமக்கள் மூலமாக எதிர்காலத்தில் வாழ்வோருக்கு எடுத்துரைக்கப்பட்ட உன்னதமான கருத்துக்கள் பல பொதிந்த சிறந்த நூல்களாகும்.

📚 அதிகாரம் என்பது பொதுநலமாக இருக்கும் பொழுது அனைவரையும் காக்கும் பாதுகாவலனாக இருக்கும். அதே அதிகாரம் சுயநலமாக மாறும் பொழுது அனைவரையும் அழிக்கும் எமனின் பாசக்கயிறாகவும் மாறும். அளவற்ற இன்பம், அளவில்லாத இன்னல்களை உருவாக்கக் கூடியதாகும். எதிர்ப்பை வெல்லும் காலத்தை அறியும் வரை பொறுமை காத்தல் என்பது உன்னதம். அதைவிட தன் எண்ணம் ஈடேறும் வரை தனது செயலை வெளிப்படுத்தாமல் இருப்பது சிறப்பாகும்.

📚 வாழ்வதும், வீழ்வதும் ஒரு முறையேயானாலும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீட்டில் மாற்றம் ஏற்படும் பொழுது வீழ்வதும், வாழ்வதும் மற்றவர்களுக்கு உதாரணமாக மாறுகின்றன.

📚 பதவியில் இருக்கின்றவன் தன்னுடைய நிலையிலிருந்து தவறும் பட்சத்தில் அவனுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நிலையில் தோன்றக்கூடிய மாற்றங்களையும், அவனை சார்ந்து இருக்கக்கூடிய மக்களின் நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களையும், அவன் வம்சா வழியில் ஏற்படப்போகும் மாற்றத்தினையும் சீவக சிந்தாமணி என்னும் நூலின் மூலமாக இனி வரும் தினங்களில் இலக்கியச் சுவையுடன் நாம் அறிந்து கொள்வோம்.

ஏமாங்கத நாடு:

🌟 இயற்கை வளங்கள் அனைத்தும் நிரம்பி இருக்கக்கூடிய எழில் மிகுந்த விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர்கள் கூட மனிதர்களாக பிறந்து வாழவேண்டும் என்று எண்ணக்கூடிய அளவில் செழித்து விளங்கக்கூடிய ஒரு அழகிய நாடுதான் ஏமாங்கத நாடாகும்.

🌟 ஆகாயத்தில் இருக்கக்கூடிய நட்சத்திரங்களும், மேகங்களும் நாட்டின் வளங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன. எந்த நிலையிலும் பொய்க்காத மேகங்களால் நாட்டின் வளமும், வளமையும் பெறுகி நிற்கின்றன. அதனால் மனிதர்களிடத்தில் இருந்துவந்த செல்வ வளங்களும் நிரம்பி வழிந்தன.


🌟 வளங்கள் நிரம்பி இருந்த காரணத்தினால் மனிதர்கள் தனக்கென்று எதையும் எடுத்துக் கொள்ளாமல் துன்பத்தில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளையும், தான தர்மங்களையும் செய்து வந்தனர்.

🌟 நல்லோர்கள் எங்கே வாழ்கின்றார்களோ, அங்கே இறைவனும் குடி கொள்வான் என்பது போல அனைத்து வளங்களும் நிரம்பி வழிந்தன. கல்வி கற்ற சான்றோர்கள் நாட்டில் முறையாக மதிப்புடன் நடத்தப்பட்டனர்.

🌟 அவர்களுடைய கல்வி அறிவு நாட்டிற்கு ஒரு தீப ஒளி போல இருளை விலக்கி இருந்தது என்றால் அது மிகையல்ல. அந்த தீபச் சுடரின் ஒளியினால் மக்கள் அனைவரும் தீமை எது? நன்மை எது? என்று பிரித்துப் பார்த்து பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்டு சிறந்து விளங்கினார்கள். தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமானது அனைவரிடத்திலும் குறைந்து காணப்பட்டது.

🌟 பல துறைகளில் சிறந்து விளங்கிய வணிகர்களும் தான் அறம் வளர்ப்பதிலும் உறுதுணையாக இருந்தனர். கலை சார்ந்த துறைகளில் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கினர்.

🌟 ஆண், பெண் பேதமின்றி அனைவரும் சமமாகவே ஆடலிலும், பாடலிலும் ஈடுபட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்து வந்தனர்.

🌟 ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாகவும், மற்றவர்கள் அனைவருக்கும் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகள் அனைவரும் மரியாதையுடனும், அவர்களுக்குண்டான மதிப்புகளுடனும், வாழ்க்கையை நடத்துவதற்கான சூழ்நிலைகள் மன்னருடைய அரசாட்சியில் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

🌟 விவசாயிகள் அனைவரும் எந்த நாட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த நாடு மட்டற்ற வளர்ச்சி அடையும் என்பது போல ஏமாங்கத நாடும், மற்ற நாடுகளைவிட சிறந்து விளங்கியது.

🌟 விவசாயிகள் இடத்தில் இருந்துவந்த வளமை என்பது எப்படி இருந்தது? என்று கூற வேண்டுமென எண்ணினால் நெற்பயிர்கள் விளைந்து இருக்கக்கூடிய நிலத்தில் அந்தப் பயிர்களை உண்பதற்காக வரக்கூடிய புள்ளினத்தை விரட்டி அடிப்பதற்கு விவசாயிகள் எவரும் அவ்விடத்தில் இருக்கக்கூடிய கற்களைத் தேடவில்லை. அதற்கு பதிலாக தனது காதுகளில் அணிந்திருந்த குழைகளை கழற்றி அவற்றின் மீது வீசி எறிந்தனர் என்றால் அவர்களிடத்தில் இருந்த செல்வ சிறப்புக்கு இதை விட மிகச் சிறந்த உதாரணத்தை தர இயலாது.


Share this valuable content with your friends