🌟 அம்மன் வடிவம் : பிராம்மி.
🌟 பூஜையின் நோக்கம் : சண்ட முண்டனை வதம் புரிய செல்லுதல்.
🌟 பிராம்மி வடிவம் : பிரம்ம தேவரின் அம்சமாகவும், சரஸ்வதி தேவியின் உருவமும் கொண்டவள்.
🌟 நான்கு கரங்களை கொண்டு அன்னப்பறவையில் வீற்றிருப்பவள்.
🌟 வெண்ணிற ஆடை தரித்தவள்.
🌟 தர்ப்பை புல்லில் வாசம் செய்பவள்.
🌟 பிராம்மியை வழிபடுவதால் கல்வி வேள்விகளில் மேன்மை உண்டாகும்.
🌟 தென் நாட்டில் ஏழாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் லவண துர்க்கை.
🌟 திருமால் இராமபிரானாக அவதாரம் எடுத்து அரசாண்ட போது லவண சுரன் என்ற அரக்கன் வாழ்ந்து பலவிதமான இன்னல்களை தோற்றுவித்தான்.
🌟 லவண சுரனை அழிப்பதற்காக இராமபிரானின் சகோதரனான சத்துருகன் போரிட சென்றார். இருப்பினும் சத்துருகனால் லவண சுரனை அழிக்க இயலவில்லை.
🌟 தங்களது குலகுருவான வசிட்டரின் ஆலோசனைப்படி இராமர் துர்க்கை தேவியை வழிபட்டார். சத்துருகன் லவண சுரனை அளித்து வெற்றி பெற்றார்.
🌟 சத்துருகன் லவண சுரனை அழிப்பதற்காக இராமபிரான் வழிபட்ட துர்க்கை தேவியே லவண துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.
🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : தாழம்பூ
🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : தும்பை
🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : மஞ்சள் நிறம்
🌟 அன்னையின் அலங்காரம் : சாம்பவி துர்க்கை அலங்காரம்
🌟 அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : மஞ்சள் நிற மலர்கள்.
🌟 கோலம் : மலர் கொண்ட திட்டாணி கோலம் போட வேண்டும்.
🌟 நெய்வேத்தியம் : எலுமிச்சை சாதம்
🌟 குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 8 வயது
🌟 குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : சுபிட்சம் உண்டாகும்.
🌟 பாட வேண்டிய ராகம் : பிலஹரி
🌟 பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : படகம்.
🌟 குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : சூரணம்.
🌟 பலன்கள் : வாழ்க்கையில் தெளிவு பெற்று முக்தி கிடைக்கும்.