1. சனி திசை, புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 சுப காரியங்கள் கைகூடும்.
🌟 மாமன் உறவு வகைகளில் ஆதரவுகள் கிடைக்கும்.
🌟 கலை துறைகளில் அதிக விருப்பம் உண்டாகும்.
🌟 ஏஜென்ஸி சம்பந்தமான தொழிலில் இலாபம் உண்டாகும்.
2. மேஷ லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 எதிலும் போராடி வெல்லும் குணம் உடையவர்கள்.
🌟 நாட்டுப்பற்று மிக்கவர்கள்.
🌟 நிர்வாக திறமை உடையவர்கள்.
3. சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள் எப்படி இருக்கும்?
🌟 எவரின் உதவியையும் எதிர்பாராதவர்கள்.
🌟 தன் விருப்பம் போல் வாழக் கூடியவர்கள்.
🌟 தன்னம்பிக்கை உடையவர்கள்.
🌟 எல்லாத் துறைகளிலும் திறமை உடையவர்கள்.
4. வலது கண் துடித்தால் என்ன பலன்?
🌟 வலது கண் துடிப்பது என்பது பொருள் வரவைக் குறிக்கின்றது.
5. இடது கண் துடித்தால் என்ன பலன்?
🌟 இடது கண் துடிப்பது என்பது மனதிற்கு விரும்பாத செயல்கள் நடைபெறும் என்பதைக் குறிக்கிறது.
🌟 ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஒன்று, நான்கு, ஏழு மற்றும் பத்தாம் இடங்களை கேந்திர ஸ்தானம் என்று கூறுவார்கள்.
🌟 இவர்களின் பலத்தைக் கொண்டே நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் இன்ப துன்ப நிகழ்வுகளை அறிய இயலும்.
6. சீரடி சாயி பாபா விரதங்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
🌟 வியாழக்கிழமைகளில் சாயி பாபா நாமத்தை எண்ணி விரதத்தை தொடங்க வேண்டும்.
🌟 காலை விரதம் தொடங்கிய முதல் மாலை வரை திரவிய உணவுகளை எடுத்துக் கொண்டு விரதத்தை கடைபிடிக்கலாம்.
🌟 மாலையில் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
🌟 உடல் நிலைக்கு தகுந்தவாறு விரத காலத்தை பின்பற்றவும்.
7. சுக்கிரன், புதன், ராகு மூன்று கிரகங்களும் சேர்ந்து கடக ராசியில் நின்றால் என்ன பலன்?
🌟 மனதில் பலவிதமான குழப்பங்கள் உண்டாகும்.
🌟 உணர்ச்சி வேகம் உடையவர்கள்.
🌟 கற்பனை கதைகள் எழுதுவதில் வல்லவர்கள்.
🌟 புதிய நுட்பமான துறைகளில் ஆர்வம் உண்டாகும்.