அமைதியும், நிதானமும், நேர்மையும் கொண்ட மீன ராசி அன்பர்களே !!!
குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு பெயர்கின்றார். இதுவரை தடைபட்ட செயல்கள் யாவும் இனிதே நடைபெறும். வாழ்க்கையில் உள்ள நெளிவுசுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். பேச்சில் நிதானமும் அமைதியும் உண்டாகும். ஆன்மீக பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதை உறுத்திகொண்டிருந்த செயல்களுக்கு தீர்வு கிடைக்கும்.
பெருந்தன்மையான செயல்பாடுகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். சுப நிகழ்ச்சிகளால் இல்லங்களில் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கைகூடும். உங்கள மீதான நம்பிக்கையும் பொறுப்புகளும் அதிகரிக்கும். இணையதளம் சம்பந்தமான வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
புதுவிதமான செயல்களில் ஈடுபடுவீர்கள். சொத்துப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பொதுக் காரியங்கள் மற்றும் சமூக பணிகளை மேற்கொள்வதில் ஆர்வமும் ஈடுபடும் ஏற்படும். வாழ்க்கையில் புதுவிதமான இலக்குகள் மற்றும் ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மேம்படும். புத்திரர்களின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல பலனை தரும். விலை உயர்ந்த புதிய மின்சார சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். சிலருக்கு பணி சம்பந்தமான புதிய வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கி கிடைக்கும். மாற்றமான சூழல் தகுந்த மாற்றத்தையும் வளர்ச்சியையும் அளிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில் இருந்த பொருள் தேக்க நிலை குறையும். கிடைக்கும் இலாபத்தை கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாகும். தொழிலின் அடுத்த நிலையை மேற்கொள்ளும் சூழலும் அதற்கான வாய்ப்புகளும் அமையும். நிதானமான முன்னேற்றம் நிலைத்த வெற்றியை அளிக்கும் என்பதனை நினைவில் கொள்ளுதல் நன்மையை அளிக்கும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு முயற்சிக்கேற்ற வளர்ச்சி உண்டாகும். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். ஆராய்ச்சி சம்பந்தமான கல்வியில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
பெண்களுக்கு :
பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் அனுசரித்து செல்லவும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் இருப்பார்கள். சுய தொழில் முனையும் பெண்களுக்கு நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் புதுவிதமான முயற்சிகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்குப் பிரபலமாவீர்கள். மூத்த கலைஞர்களிடமிருந்து சில வாய்ப்புகளும் ஆதரவும் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகள் பொறுமையுடன் செயல்படுவதால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும் . சக உறுப்பினர்களிடம் கனிவுடன் பேசுவது நன்மையை அளிக்கும். எதிர்பாராமல் செய்த உதவிக்கான பலன்கள் சாதகமாகும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் கவனம் வேண்டும். வேலையாட்கள் மூலம் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். புதிய பயிர் சம்பந்தமான விளைச்சல் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்க வாய்ப்புண்டு.
பரிகாரம் :
முருகனை செவ்வாய் கிழமையில் வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
வெள்ளிக்கிழமையில் லட்சுமி தேவியை வழிபட்டு வர பொருளாதாரம் மேம்படும்.