No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 - கும்ப ராசி !!

Sep 20, 2018   Ananthi   574    இன்றைய ராசிபலன் 

அதீத திறமைகளையும், எதையும் நன்கு சிந்தித்து செயல்படும் கும்ப ராசி அன்பர்களே!

இதுவரை உங்களது ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்த குரு பகவான் உங்களது ராசிக்கு பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். எதிர்பார்த்த சுபச் செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளில் உதவும்போது சிந்தித்து செயல்படவும். பணி நிமிர்த்தமான வீண் அலைச்சல் உண்டாகலாம். மனதில் உள்ள சில எண்ணங்களால் பணியில் காலதாமதமும், அவப்பெயரும் உண்டாகலாம். சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் இன்பம் களைகட்டும். புதிய நபர்களின் அறிமுகம் சாதகமான ஆதாயத்தை தரும். புதிய பணி நிமிர்த்தமான சுப செய்திகள் கிடைக்கும்.

தாய்வழி உறவினரின் மூலம் ஆதரவு உண்டாகும். வீடு மற்றும் வாகனத்தில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான கடனுதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் அகலும். செய்யும் பணிகளில் வேகம் அதிகரிக்கும். தொலைநோக்கு சிந்தனை அதிகரிக்கும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு சாதகமாக அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் வரும். எதிர்பாராத நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். மனதில் ஒருவிதமான கவலையும், அச்ச உணர்வும் தோன்றி மறையும். அறிமுகம் இல்லாத தொழில்களில் முதலீடு செய்யும்போது தகுந்த ஆலோசனை பெற்று செய்யவும். பயணங்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு :

தொழில், வியாபாரத்தில் சிந்தித்து செயல்படுவது நன்மையை தரும். உழைப்பிற்கு ஏற்ற லாபம் சுமாராக இருக்கும். புதிய வியாபாரம் தொடங்குவதிலோ அல்லது அதிக முதலீடுகளை செய்வதிலோ நன்கு ஆலோசித்து முடிவு எடுக்கவும். வரவு மற்றும் செலவுக்கான கணக்குகளை பராமரித்து வைக்கவும். தொழில் நிமிர்த்தமான முக்கிய பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகஸ்தரர்களுக்கு பணி நிமிர்த்தமான வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். செய்யும் பணிகள் சம்பந்தமான கோப்புகளை கவனமாக கையாளவும். மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். பிறரால் வீண் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். அன்றைய பாடங்களை தினமும் படித்துவிடுவது நல்லது. போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். ஆராய்ச்சி சம்பந்தமான துறைகளில் உள்ளவர்கள் வழிநடத்துவோரின் ஆலோசனை பெற்று அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளவும்.

பெண்களுக்கு :

பெண்களுக்கு பணி நிமிர்த்தமான இடமாற்றமும், விருப்பம் இல்லாத பயணமும் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். மனதில் வீண் எண்ணங்களால் மனச்சங்கடம் உண்டாகலாம். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமையும், நிதானமும் வேண்டும்.

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பயிர் விளைச்சல் மூலம் வருமானம் கிடைக்கும். புதுவிதமான நவீனரக இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை செயல்படுத்த காலதாமதமாகும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மேலிடத்திலிருந்து வேலைப்பளுவும் அதற்கான விரயமும் நேரிடலாம். பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

கலைஞர்களுக்கு :

கலைத்துறையினருக்கு சாதகமற்ற சூழ்நிலை காணப்படும். முயற்சிக்கான வேலைகள் சற்று காலதாமதமாக வந்து சேரும். ஆனால், அதிக விடாமுயற்சி தேவைப்படும்.

பரிகாரம்:

திங்கட்கிழமை தோறும் பார்வதி தேவியை வணங்கி வரவும்.

விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.


Share this valuable content with your friends


Tags

ant கிருஷ்ண ஜெயந்தியில் ஆண் குழந்தை பிறக்கலாமா? குழந்தையை கிணற்றில் போடுவது போலவும் தினசரி ராசிபலன்கள் (05.08.2020) சர்வதேச கன உலக தினம் வளையல் விற்போரை கனவில் கண்டால் என்ன பலன்? தேய்பிறையில் தாலி வாங்கலாமா? பகல் கனவு பலிக்குமா? 2ல் மாந்தி இருந்தால் என்ன பலன் வீட்டில் பீரோவை எங்கு வைக்க வேண்டும்? அடிக்கடி தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ராகு மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? நவம்பர் 18 சந்தேகத்தையும் கொண்டவர்கள் இவர்கள்தான் செப்டம்பர் 15 இன்றைய ராசி பலன் 03.07.2019 Rasipalan in pdf format!! கண் தெரியாமல் போவது போல் கனவு கண்டால் நரகாசுரன் கேட்ட வரம் கும்ப ராசியில் பிறந்தவர்களின்