No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 - மகர ராசி !!

Sep 20, 2018   Ananthi   690    இன்றைய ராசிபலன் 

எதையும் நிதானமாக சிந்தித்து வெற்றி வாகை சூடும் மகர ராசி அன்பர்களே!!

குருபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில இருந்து பதினொன்றாம் இடத்திற்கு பெயர்கின்றார். வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் கவனம் வேண்டும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். தாய்மாமன் உறவுகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். சவாலான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும்.

திட்டமிட்ட செயல்கள் எண்ணியவாறு நடைபெறும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பிறரை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்காமல் நீங்களே பார்ப்பது நன்மையை தரும். இளைய சகோதரர்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். சிலருக்கு காதல் கைகூடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து திருமண வரன்கள் அமையும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மறைந்திருந்த தனித்திறமை வெளிப்படும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகம் உண்டாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதுவிதமான எண்ணங்களால் புதிய வாய்ப்புகள் கைகூடும்.

வியாபாரிகளுக்கு :

தொழில், வியாபாரத்தில் புதுவிதமான முயற்சிகளால் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான அதிகாரிகளிடம் நிதானப்போக்கை கையாளவும். எதிர்பாலின மக்களால் இடர்பாடுகள் ஏற்படலாம். புதிய முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்கள் மூலம் ஆதரவும், ஆதாயமும் உண்டாகும். உத்தியோகத்தில் மரியாதை கூடும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு :

மாணவர்கள், சக மாணவர்களால் பாராட்டப்படுவார்கள். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஆசிரியரின் வழிகாட்டுதல் கைகொடுக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு அமையும். எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி செயல்பட்டால் சிறப்பான எதிர்காலம் அமையும்.

கலைஞர்களுக்கு :

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். தடைபட்டு இருந்த படைப்புகள் வெளியாவதற்கு சில முக்கிய பிரமுகர்களின் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பரிசுகளும், பாராட்டுகளும் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் கவனம் வேண்டும்.

பெண்களுக்கு :

பெண்களுக்கு அக்கம்பக்கத்தினரால் சாதகமான ஆதாயம் உண்டாகும். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி உயர்வு கிடைக்கலாம். சுய தொழில் நிமிர்த்தமான எண்ணங்கள் மேலோங்கும்.

பரிகாரம் :

புதன்கிழமைதோறும் ராமரை வழிபட்டு வர நன்மை உண்டாகும். சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்.


Share this valuable content with your friends