எதையும் நிதானமாக சிந்தித்து பிறருடைய முன்னேற்றத்தில் பங்குகொள்ளும் தனுசு ராசி அன்பர்களே!!
குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் இருந்து விரைய ஸ்தானமான பனிரெண்டாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகின்றார்.
இந்த குருப்பெயர்ச்சியில் எடுத்த வேலைகளை பல தடைகளை தகர்த்து வெற்றி காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். உங்களை நம்பி புதுப்பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தலையீட்டை தவிர்க்கவும். தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
குடும்பத்தினருடன் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் மாற்றம் மற்றும் அபிவிருத்திக்கான சூழல் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல்திறன் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் மற்றும் எதிர்கால நலனுக்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீடு கட்ட தேவையான வங்கி கடனுதவி கிடைக்கும். தாய்வழி சொத்துப் பிரச்சனை மற்றும் பூர்வீக சொத்துப் பிரச்சனைக்கு சுமூகமாகத் தீர்வு காண முயற்சிக்கவும்.
சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புத்திரர்களுக்கு நல்ல வரன் அமையும். உறவினர்களால் மனக்கசப்பான சங்கடங்களும், ஆதரவும் உண்டாகும். வாகனங்களில் செல்லும்போதும், விலை உயர்த்த பொருட்களை கையாளும்போதும் கவனத்துடன் செயல்படவும். தனவரவுகளில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களுக்கு ஜாமின் மற்றும் கடன் உதவிகள் செய்யும்போது சற்று சிந்தித்து முடிவுகளை எடுக்கவும். நெருக்கடியான பல சூழல்கள் வந்தாலும் சமாளிக்கும் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகத்தில் வேலைப்பளு மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ற சம்பள உயர்வு கிடைக்கும். வெளி மாநிலம் அல்லது அயல்நாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். சிலருக்கு செய்யும் வேலைகளின் மீது மற்றவர்களால் அவப்பெயர் உண்டாகலாம். பணிகளின்போது நிதானத்துடன் செயல்படவும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில் சில நுணுக்கமான விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். தொழில் சார்ந்த போட்டிகளை சமாளிக்க புதிய திட்டங்களை தகுந்த ஆலோசனை பெற்று நடைமுறைப்படுத்தவும். வேலையாட்களை ஊக்கப்படுத்தி வேலை வாங்கவும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் கல்வியில் அக்கறையுடன் படிப்பது அவசியம். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நல்லது. நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. ஆய்வகப் பரிசோதனைகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.
பெண்களுக்கு :
பெண்கள் குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்லவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உங்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவை.
கலைஞர்களுக்கு :
கலைஞர்கள் ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சியுடனும், கவனமுடனும் இருக்க வேண்டும். உங்களின் படைப்புகள் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயம் உண்டாகும். புதுவிதமான எண்ணங்களும், கற்பனைகளும் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்களுக்கு நற்பெயரும், புகழும் கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழலும், தலைமையின் ஆதரவால் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் ஏற்படும். வாக்குறுதிகள் கொடுக்கும்போதும் மற்றும் பேசும்போது கவனமுடன் இருப்பது சிறப்பான பலன்களை தரும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகள் நீர் பாசன வசதிகளை தகுந்த ஆலோசனை பெற்று அதற்கு தகுந்த பயிர்களை விதைப்பதால் தகுந்த லாபமும், வருமானமும் கிடைக்கும். இடம் தொடர்பான வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
பரிகாரம் :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு உங்கள் வசதிக்கு ஏற்றார்போல் வெற்றிலை மாலையும், வடமாலையும் சாற்றி வழிபட்டு வரவும்.