வீரமும் வைராக்கியமும் கொண்ட விருச்சக ராசி அன்பர்களே!!
குருபகவான் பனிரெண்டாம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு இடம் பெயர்கின்றனர். எந்த செயலிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்பட்டால் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். மனதில் ஒரு விதமான துணிச்சலும் தன்னம்பிக்கையும் பிறக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முயற்சிகள் தடைபடலாம். பணிகளில் பொறுப்பு மற்றும் பணிச்சுமை அதிகரிக்கலாம். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. யாரையும் நம்பி பண பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். தெளிவான எண்ணங்களால் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீகம் சம்பந்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை எதிர்பார்த்த படி செய்து முடிப்பீர்கள். மகனுக்கு நல்ல சம்பளத்தில் எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். பல நாட்களாக இருந்து வந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்த பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த செயல்கள் தடையின்றி நடைபெறும். தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சொத்துப்பிரச்சனை முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு கூடும். முக்கியமான ஆவணங்களில் கவனம் வேண்டும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த புதுவிதமான சிந்தனைகள் மேலோங்கும். உங்கள் பணிகளை மற்றவர்களை நம்பாமல் நீங்களே பார்த்துக் கொள்வது நல்லது.
வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில் இலாபம் மத்திமமாக இருக்கும். வம்பு, வழக்குகளால் எதிர்பாராத விரயம் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக இருக்க வேண்டும். பங்குதாரர்களால் ஆதாயமான சூழல் உண்டாகும். ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் மூலம் இலாபம் அடைவீர்கள்.
மாணவர்களுக்கு :
மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த அதிக முயற்சியும் கவனமும் வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பாடம் சம்பந்தமான சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவது நல்லது.
பெண்களுக்கு :
பெண்களுக்கு குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள், மனக்கசப்புகள் வந்து போகும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கடன் உதவிகள் சாதகமாகும். புத்திரர்களால் கீர்த்தி உண்டாகும். புதிய பொறுப்புகள் சிலருக்கு உண்டாகலாம்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையினர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். இளைய கலைஞர்களிடம் இருந்து சாதகமான உதவிகள் கிடைக்கும். உங்களின் படைப்புகளுக்கு அங்கிகாரமும் பாராட்டும் காலதாமதமாக கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் பெயரும் புகழும் உண்டாகும். தலைமை இடத்தில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். புதுமையான சில செயல்களால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சில போராட்டங்கள் மூலம் பிரபலம் அடைவீர்கள்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகள் பாசன வசதிகளின் தன்மையை அறிந்து அதற்கேற்ற பயிர்களை தேர்வு செய்து விளைவிக்கவும். எதிர்பார்த்த இலாபத்தில் இழுப்பறி உண்டாகலாம். சொத்து விஷயங்களில் கவனம் வேண்டும்.
பரிகாரம் :
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.
விநாயகருக்கு அருகம் புல் சாற்றி வழிபட்டு வரவும்.