No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 -கன்னி ராசி!!

Sep 20, 2018   Ananthi   545    இன்றைய ராசிபலன் 

நெளிவு சுழிவு உணர்ந்து கனிவுடன் பேசும் கன்னி ராசி அன்பர்களே !!

குருபகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில இருந்து மூன்றாம் இடத்திற்கு இடம் பெயர்கின்றார். முயற்சிக்கேற்ப வாழ்க்கையில் வளர்ச்சியும், வெற்றியும் காண்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு காலதாமதமாக கிடைக்கும். எண்ணிய செயல்களை செயல்படுத்த பலவிதமான தடைகள் குறுக்கிடலாம். தொழில் நிமிர்த்தமாக ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். பொருளாதார வளம் மேம்படும். அரசு வகையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். சிறுதூர பயணங்கள் சாதகமாக அமையும். தொலைதொடர்பு சார்ந்த துறைகளில் புதிய முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.

திறமைக்கு ஏற்ற அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பிரமுகர்களின் அறிமுகம் சாதகமாகும். கணவன்-மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கி அன்பு அதிகரிக்கும். கூட்டாளிகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். புது வேலைவாய்ப்புகள் அமையும். சுப செயல்கள் கைகூடி வரும்.

புதுவிதமான சிந்தனைகள் மலரும். தந்தையின் ஆரோக்கியமும், அணுகூலமும் மகிழ்ச்சியை தரும். தந்தை வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் அகலும். வீண்செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும், ஆராய்ச்சி சம்பந்தமான துறைகளில் முன்னேற்றமும் உண்டாகும். நிர்வாகம் சம்பந்தமான புதிய முடிவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். மனதில் இருந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தடைபட்ட தனவரவு கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். ஆன்மீக பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். தொழில் நிமிர்த்தமான கடன் வாய்ப்புகளால் அபிவிருத்தி உண்டாகும். தொழில்நுட்ப அறிவு மேம்படும். பண விவகாரத்தை நீங்களே கவனிப்பது நல்லது. ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு :

மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் இருக்கவும். ஆராய்ச்சி சம்பந்தமான கல்வியில் வழிகாட்டுதல் கிடைக்கும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். ஆசிரியர்களிடம் விதண்டாவாதத்தை தவிர்க்கவும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள்.

கலைஞர்களுக்கு :

கலைத்துறையினருக்கு முன்னேற்றமும், சாதகமற்ற சூழலும் அமையும். புதுவிதமான அனுபவம் உண்டாகும். மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் மீதான விமர்சனங்களும், வதந்திகளும் அவ்வப்போது தோன்றி மறையும். புதுவிதமான கற்பனைகளும், எண்ணங்களும் வளர்ச்சியைத் தரும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகத்தில் உங்கள் பணிகளை நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டி வரும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தொந்தரவுகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் அமைதி காக்கவும். வேலை சம்மந்தமாக சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். புதிய வாய்ப்புகளை சிந்தித்து ஏற்றுக்கொள்ளவும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும். நவீன இயந்திரம் வாங்க கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். பணியாளர்களிடம் நிதான போக்கை கையாளவும்.

பெண்களுக்கு :

பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க அலைச்சலும், பதற்றமும் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். எதிர்பாராத பரிசுகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். மூத்த அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதல் கிடைக்கப் பெறுவார்கள். தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது உங்கள் மீதான மேன்மையை அதிகப்படுத்தும்.

பரிகாரம் :

செவ்வாய்க்கிழமையில் முருகரை வணங்கி வர காரியத் தடைகள் அகலும்.

வெள்ளிக்கிழமையன்று ராகு நேரத்தில் காளிக்கு தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் நீங்கும்.


Share this valuable content with your friends