எவருக்கும் அடிபணியாத அஞ்சா நெஞ்சமும் கம்பீரமான பேசுக்களையும் உடைய சிம்ம ராசி அன்பர்களே !
இதுவரை உங்களது மூன்றாவது ஸ்தானத்தில் இருந்த குருபகவான் நான்காமிடமான சுக ஸ்தானதிற்கு பெயர்கின்றார்.
இந்த குருப் பெயர்ச்சியால் வியாபாரம் மற்றும் தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் அகலும். எதிர்பார்த்த தனவரவுகளால் திருப்தியான சூழல் அமையும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். எடுத்து செல்லும் பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியமானதாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மத்தியமான இலாபம் கிடைக்கும். எதிர்பாராத செலவுகளும் அதற்கான வருமானமும் அதிகரிக்கும். உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பயணங்களால் ஆதாயமும் அதே சமயம் உடல் அலைச்சலும், சோர்வும் உண்டாகும்.
எதிர்பார்த்த சம்பளத்துடன் கூடிய புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உபரி வருமானத்திற்கான வாய்ப்புகளும் அதற்கான சூழலும் அமையும். கடன்களை குறைப்பதற்கான உதவிகள் கிடைக்கும். இணையதளம் மூலம் சாதகமான வருமான வாய்ப்புகள் அமையும். வீட்டில் சுபச் செய்திகளால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு கூடும். நீண்ட காலமாகச் செல்ல நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நெருக்கிய நபர்களுக்கு உதவி செய்யும் போது சிந்தித்து செயல்படவும். வழக்கு சம்பந்தமான நெருக்கடியான சூழ்நிலை நீங்கும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது நல்லது.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி இருக்கும். உயர் அதிகாரிகளிடம் குறிப்பிட்ட இடைவெளி விட்டு பழகவும். கவனக்குறைவால் சில அவப்பெயர்கள் உண்டாகும். சலுகைகள் தாமதமாகும். விரும்பிய இட, பணி மாற்றம் கிடைக்கும். வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது. பணிபுரிபவர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டி வரும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க காலதாமதமாகும். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நன்மையை தரும். வியாபாரத்தில் பொறுப்பை பிறரிடம் ஒப்படைப்பதை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்களுக்கு கூடுதல் கவனம் தேவை.
மாணவர்களுக்கு :
மாணவ - மாணவிகளே கல்வியில் கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற இயலும். தேவையற்ற என்ணங்களால் குழப்பம் உண்டாகலாம் . உடனிருப்பவர்களை நன்கு அறிந்த பின் நட்பு கொள்ளவும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். புதிய ஆடை மற்றும் அணிகலன் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். சக தோழிகளிடம் மற்றும் பணியாளர்களிடம் சற்று பொறுமையுடன் செயல்படவும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்கள் ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சியுடனும், கவனமுடனும் இருக்க வேண்டும். உங்களின் படைப்புகள் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயம் உண்டாகும். புதுவிதமான எண்ணங்களும், கற்பனைகளும் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். அரசு வகையில் இருந்த பிரச்சனைகள் குறைந்து சாதகமான சூழல் அமையும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். அரசியல்வாதிகள் உடனிருக்கும் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு எண்ணிய வருமானம் கிடைக்க காலதாமதமாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பயிர் விளைச்சலில் மாற்று வழியை யோசிப்பது நெருக்கடிகளை தவிர்க்கும். கலைத்துறையினரே கிடைக்கும் வாய்ப்புகள் சிறிதாக இருப்பினும் அதை பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்தவும். சில நேரங்களில் உங்களது படைப்புகளை மற்றவர்கள் உரிமை கொண்டாட வாய்ப்பு உள்ளது. ரகசியங்களை எவரிடமும் பகிர வேண்டாம்.
பரிகாரம் :
வராகி அம்மனை வணங்கி வருவதால் எதிர்ப்புகள் குறையும். சுந்தர காண்டத்தை சனிக்கிழமை தோறும் பாராயணம் செய்வது மிகுந்த நன்மையை தரும்.