No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 - கடக ராசி !!

Sep 20, 2018   Ananthi   593    இன்றைய ராசிபலன் 

சூழ்நிலை எதுவாக இருப்பினும் அதை தனக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளும் வல்லமை கொண்ட கடக ராசி அன்பர்களே!!

இதுவரை உங்களது ராசிக்கு நான்காவது ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடத்திற்கு பெயர்ச்சி ஆகின்றார்.

இந்த குருப்பெயர்ச்சியில் புதுவிதமான எண்ணங்களும், யோசனைகளும் உண்டாகும். குடும்பத்தின் அடிப்படை தேவைகள் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியதில் இருந்த இன்னல்கள் நீங்கி மேன்மை உண்டாகும். எண்ணங்களை செயல்படுத்துவதில் சில காலதாமதம் ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். புத்திரர்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து நடந்து கொள்வார்கள். கணவன்-மனைவிக்கு இடையில் அன்பு மற்றும் புரிதலும் மேம்படும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் எதிர்பார்த்த பணி வாய்ப்புகள் சாதகமாகும். பயனற்ற வாதங்களை தவிர்ப்பதன் மூலம் மதிப்புகள் உயரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற உறவினர்களும், நண்பர்களும் மீண்டும் வந்து பேசுவதற்ககான சூழல் அமையும். குடும்பத்தினருடன் குலதெய்வ பிரார்த்தனை, புனித யாத்திரை சென்று வருவீர்கள்.

எதிர்பார்த்த முன்னேற்றமான சூழல் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வேலை தேடுவோருக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். பணிபுரியும் இடங்களில் கீர்த்தியும், கௌரவமும் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் இன்பம் பெருகும். இணையதள தொடர்பான தொழிலால் எண்ணிய லாபம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி மகிழ்வீர்கள். உங்களின் வார்த்தைக்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கைகூடும். புதுவிதமான வியாபார யுக்திகளால் லாபம் பெருகும். நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் கூட்டாளிகள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும், பதவி உயர்வும் சாதகமாகும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும் மற்றும் மேல் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கை உயரும். உங்களிடம் சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

பெண்களுக்கு :

பெண்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மையை தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானமும், அங்கீகாரமும் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் மேம்படும். முக்கிய பதவிகளில் இருப்போருக்கு ஆதரவுகள் பெருகும். வழக்கு விவகாரத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு :

கலைத்துறையினருக்கு மனதில் புதிய புத்துணர்ச்சி உண்டாகும். தனவரவு அதிகரிக்கும். சாதுர்யமான செயல்பாடுகளால் தடைகளை கடந்து வெற்றி காண்பீர்கள். உங்கள் மீதான அவப்பெயர்கள் நீங்கும். புதுவிதமான கற்பனை எண்ணங்களால் அனைவராலும் பாரட்டப்படுவீர்கள்.

மாணவர்களுக்கு :

மாணவர்கள் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் நிதானம் வேண்டும். கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால் அதிக மதிப்பெண் பெறலாம். விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகளில் பரிசும், பாராட்டும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் துறையினர் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உயர்மட்ட அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உங்களின் தேவைகள் நிறைவேறும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள்.

பரிகாரம் :

புதன்கிழமைதோறும் துளசி இலைகளால் பெருமாளையும், லட்சுமி தேவியையும் வழிபட்டு வரவும்.

ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதால் இன்னல்கள் நீங்கி நன்மை ஏற்படும்.


Share this valuable content with your friends