No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மார்கழி மாதத்தில் திருமணம் வைக்கலாமா?

Sep 19, 2018   Ananthi   582    ஜோதிடர் பதில்கள் 

1. செவ்வாய் ஓரையில் என்னென்ன வேலைகளை செய்யலாம்?

🌟 நிலம் வாங்கலாம்.

🌟 அக்ரிமெண்ட் போடலாம்.

🌟 இரத்த தானம் செய்வது, உறுப்பு தானம் செய்வது மற்றும் மருத்துவ உதவிகள் செய்வது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

2. மார்கழி மாதத்தில் திருமணம் வைக்கலாமா?

🌟 மார்கழி மாதத்தில் திருமணம் வைக்க வேண்டாம்.

🌟 மார்கழி மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்கு மட்டும் உரிய மாதமாகும்.

🌟 மார்கழி மாதத்தில் இறைவனுக்கு உரிய பஜனையை நடத்துதல் அல்லது பஜனையில் கலந்து கொள்வதன் மூலம் இறைவனின் பரிப்பூரண அருளைப் பெறலாம்.

3. துன்பங்களை விரட்ட என்ன செய்ய வேண்டும்?

🌟 குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

🌟 நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

🌟 ஆன்மீகச் சொற்பொழிவுகளை கேட்டல் மற்றும் பெரியோர்களை மதித்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

🌟 எப்போதும் சிரித்த முகத்துடன் அனைவரையும் அரவணைத்தல் வேண்டும்.

4. புத்திர பாக்கியம் கிடைக்க என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

🌟 புத்திர பாக்கியம் கிடைக்க தட்சிணாமூர்த்திக்கு பௌர்ணமி அன்று விரதம் மேற்கொண்டு மஞ்சள் வஸ்திரத்தை தானம் செய்ய வேண்டும்.

🌟 தம்பதிகள் ஸ்ரீராமருக்கு செம்பருத்தி பூக்களை அர்ப்பணம் செய்து அந்த பூக்களை உண்டு வர புத்திர பாக்கியம் கிடைக்கும்.

5. நான் துலாம் லக்னம். 8ல் சந்திரன், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அலைச்சல் அதிகம் கொண்டவர்கள்.

🌟 நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.

🌟 அடிக்கடி உடல்நல பாதிப்பு ஏற்படும்.

🌟 வாகனச் சேர்க்கையில் தடை உண்டாகும்.


Share this valuable content with your friends