பில்லி, சூனியத்தால் ஏற்படும் விளைவுகள் பழிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
Sep 19, 2018 Ananthi 535 ஜோதிடர் பதில்கள்
1. பில்லி, சூனியத்தால் ஏற்படும் விளைவுகள் பழிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
🌷 கடல் நீரால் வீட்டை சுத்தப்படுத்த வேண்டும்.
🌷 மேலும், வீட்டில் உள்ள கல் உப்பினை கொண்டு நீரில் கரைத்து வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும்.
2. லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
🌷 லக்னத்தில் கேது இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்.
🌷 சாதனையாளராகவும், எதிலும் வெற்றி பெறுபவராகவும் இருப்பார்.
🌷 பொருளாதார வசதி நிலையானதாக இருக்கும்.
பரிகாரம் :
🌷 கேதுவிற்கு அதிதேவதையான விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்கி வர கேதுவினால் ஏற்படும் பிரச்சனைகளின் வீரியம் குறையும்.
3. தொடையில் மச்சம் இருந்தால் நல்லதா? கெட்டதா?
🌷 இடதுபுற தொடையில் மச்சம் இருந்தால் பொருளாதார சிக்கலுடன் வாழ்வார்கள்.
🌷 தன் விருப்பம்போல செயல்களைச் செய்து பிரச்சனைகளை தேடிக் கொள்வார்கள்.
🌷 வலதுபுற தொடையில் மச்சம் இருந்தால் தன் முயற்சிகள் மூலம் முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.
4. எனக்கு வாகன யோகம் உண்டா? இல்லையா? என்பதனை எப்படி அறிவது?
🌷 ஒருவரின் ஜாதகத்தை கொண்டே அவருக்கு வாகன யோகம் உண்டா? இல்லையா? எனக் கூற இயலும்.
🌷 ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் சொகுசு வாகன யோகம் உண்டு.
🌷 ஜாதகத்தில் சனி பலம் பெற்றிருந்தால் கனரக வாகன யோகம் உண்டு.
🌷 ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் வேளாண்மை சம்பந்தப்பட்ட வாகன யோகம் உண்டு.
5. குழந்தை பிறக்கும்போது மாலை சுற்றி இருந்தால் நல்லதா? கெட்டதா?
🌷 குழந்தை மாலை சுற்றி பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது.
🌷 தாய்மாமன் குழந்தையின் முகத்தை முதன் முதலில் நல்லெண்ணெயில் பார்த்த பின்பே நேரடியாக பார்க்க வேண்டும்.