No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




30 வயதுக்குப்பின் ராகு, கேது பலன் எப்படி இருக்கும்?

Sep 11, 2018   Ananthi   537    ஜோதிடர் பதில்கள் 

1. பிள்ளையை தத்துக்கொடுத்து தவிடுக்கு வாங்கும் பரிகாரம் எங்கு செய்ய வேண்டும்?

🌟 பிள்ளையை தத்துக்கொடுத்து தவிடுக்கு வாங்கும் பரிகாரத்தை குலதெய்வ கோவிலிலோ அல்லது சிவாலயங்களிலோ செய்வது நன்மையைத் தரும்.

2. மணமக்கள் இருவருக்கும் திருமணத்தின் போது பட்டம் கட்டுவது எதற்காக?

🌟 குடும்பம் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் இருவரையும் சார்ந்தது என்பதை குறிக்கவே திருமணத்தில் இருவருக்கும் பட்டம் கட்டப்படுகிறது.

3. மகர லக்னத்தில் குரு, சுக்கிரன், 4ல் செவ்வாய், 5ல் சந்திரன், 6ல் சனி - கேது, 11ல் புதன் - சூரியன், 12ல் ராகு, குரு திசை, சூரிய புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 பயணங்களின் மூலம் அலைச்சலும், உடல் சோர்வும் உண்டாகும்.

🌟 பணியில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.

🌟 வாகனப் பயணங்களில் கவனமும், எச்சரிக்கையும் வேண்டும்.

🌟 உயர் அதிகாரிகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும்.

🌟 மனதில் தோன்றும் பலவிதமான குழப்பங்களால் சரியான முடிவை எடுக்க இயலாத நிலையில் இருப்பீர்கள்.

4. 30 வயதுக்குப்பின் ராகு, கேது பலன் எப்படி இருக்கும்?

🌟 ராகு - கேது அவர்கள் நின்ற வீட்டிற்கு ஏற்ப வயது வரம்புகள் இன்றி பலன் அளிக்கக்கூடியவர்கள்.

🌟 செய்த வினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை காலம் தவறாமல் நிழல்போல் நின்று அளிக்கக்கூடியவர்கள்.

5. சுத்த ஜாதகருக்கு, ராகு - கேது ஜாதகரை திருமணம் செய்து வைக்கலாமா?

🌟 சுத்த ஜாதகருக்கு, ராகு - கேது ஜாதகரை திருமணம் செய்து வைக்கக்கூடாது.

6. சுக்கிரன் எந்த இடத்தில் இருந்தால் சிறப்பான பலன்களை அளிப்பார்?

🌟 சுக்கிரன் நின்ற இடம் மற்றும் லக்னத்திற்கு ஏற்ப பலன்களை அளிக்கக்கூடியவர்.

🌟 1 - 2 - 4 - 5 - 9 - 11 போன்ற இடங்களில் சிறப்பான பலன்களை லக்னத்திற்கு ஏற்ப கொடுக்க வல்லவர்.

7. முல்லை கொடி வளர்த்தால் நல்லதா? வாஸ்துப்படி எந்த இடத்தில் முல்லை கொடியை வைக்க வேண்டும்?

🌟 முல்லை கொடி வளர்ப்பது நல்லது.

🌟 வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் உயரம் அதிகமான மரங்களையும், கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் வீட்டின் மதில் சுவர்களை விட குறைவான உயரம் கொண்ட செடிகளையும் வளர்க்க வேண்டும்.


Share this valuable content with your friends