No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சரஸ்வதி அம்மாள் கனவில் மலர் கொடுத்தால் என்ன பலன்?

Sep 10, 2018   Ananthi   1513    கனவு பலன்கள் 

1. ஒரு கன்னி பெண் இரத்தத்தில், கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணிற்கு பொட்டு வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒரு கன்னி பெண் இரத்தத்தில், கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணிற்கு பொட்டு வைப்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.

2. நாய் கட்டை விரலை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கட்டை விரலை கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும்.

🌟 மேலும், புதிய முயற்சிகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.

3. என் தோழி கர்ப்பமாக உள்ளார். அவள் கரு கலைந்ததாக கூறி அழுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 கரு கலைந்ததாக கனவு கண்டால் கிடைக்கின்ற வாய்ப்புகளில் திறமையை வெளிப்படுத்தாமல் அவப்பெயர்கள் உண்டாவதற்கான சூழல் உண்டாகும் என்பதனை உணர்த்துகிறது.

4. சரஸ்வதி அம்மாள் கனவில் மலர் கொடுத்தால் என்ன பலன்?

🌟 சரஸ்வதி அம்மாள் கனவில் மலர் கொடுத்தால் சுபிட்சம் உண்டாகும்.

5. நான் வாழை மரத்தை வெட்டுவதற்கு கையில் கத்தியுடன் இருக்க மற்றவர்கள் வாழை மரத்தை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மரத்தை வெட்டுவது போல் கனவு கண்டால் உடன் இருப்பவர்களை சரியாக புரிந்துக்கொள்ளாமல் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான சூழல் உண்டாகும் என்பதனை உணர்த்துகிறது.


Share this valuable content with your friends