1. நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 நெருப்பை கனவில் கண்டால் மாற்றத்திற்கான வாய்ப்புகளும், சூழலும் அமையும்.
2. கழுத்தில் போட்டிருக்கும் கருகமணி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 கழுத்தில் போட்டிருக்கும் கருகமணி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளால் உங்களின் திறமைகள் வெளிப்படுவதற்கான சூழல் உண்டாகும்.
3. வெள்ளைக் குதிரையில் வலம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 வெள்ளைக் குதிரையில் வலம் வருவது போல் கனவு கண்டால் உங்களின் திறமைகள் வெளிப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவதற்கான சூழல் அமையும்.
4. என் தந்தை, என் மகனின் மண் உண்டியலை உடைப்பது போல் கனவு வந்தது. இதற்கு என்ன பலன்?
🌟 உங்களின் தந்தை உங்கள் மகனின் மண் உண்டியலை உடைப்பது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சில பொருளாதார நெருக்கடிகள் உண்டாவதற்கான சூழல் அமையும்.
5. அதிகாலையில் ஒரு பெண்ணை திருமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 ஒரு பெண்ணை திருமணம் செய்வது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.
6. புதுச்சேலையை பணம் கொடுத்து வாங்குவது போலவும், பாம்பாட்டி மகுடியை ஊதி பாம்புகளை கையில் பிடித்து வருவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களால் சில எதிர்ப்புகள் உண்டாகும்.
🌟 எனவே செயல்களின் தன்மை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படவும்.