No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தையை கிணற்றில் போடுவது போலவும், பிறகு தூக்குவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 27, 2018   Ananthi   623    கனவு பலன்கள் 

1. நான் ஒருவருக்கு செருப்பு வாங்கி தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளை மறைமுகமாக செய்து வருவதை காட்டிலும் உடன் இருப்போர்களிடம் பகிர்ந்து செய்தால் பலன் அதிகரிக்கும்.

2. நிறைய பல்லிகளை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நிறைய பல்லிகளை அடிப்பது போல் கனவு கண்டால் செய்த செயல்களால் உண்டான தவறினை திருத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.

3. வீடு எரியும் தருவாயில் பாம்பு துடித்துக்கொண்டு இருக்கையில் வீடு எரிந்து சாம்பலானது. அச்சமயம் உடனே நான் பரிகாரம் செய்ய கோவிலிற்கு செல்வதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் கிடைக்க இருந்த புதிய வாய்ப்புகளுக்கான பலன்கள் பல எதிர்ப்புகளை தாண்டி காலதாமதமாக கிடைக்கும் என்பதனை உணர்த்துகிறது.

4. ஒரு வாலிபர் வெற்றிலை போட்டு துப்புவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒரு வாலிபர் வெற்றிலை போட்டு துப்புவது போல் கனவு கண்டால் எதிர்பாலின மக்களால் சில நெருடலான மனவருத்தங்கள் உண்டாகலாம். ஆகவே, எங்கும் எதிலும் கவனமாக இருக்கவும்.

5. குழந்தையை கிணற்றில் போடுவது போலவும், பிறகு தூக்குவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தையை கிணற்றில் போடுவது போலவும், பிறகு தூக்குவது போலவும் கனவு கண்டால் நடந்து முடிந்த செயலை எண்ணி கவலைப்படுவதை உணர்த்துகிறது.

🌟 முடிந்த செயலை எண்ணாமல் நடக்கப்போவதை எண்ணி கால தாமதமும், அலட்சியமும் இன்றி செயல்படவும்.


Share this valuable content with your friends