1. காளிதேவியை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 காளிதேவியை கனவில் கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
2. பௌர்ணமி நிலவை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பௌர்ணமி நிலவை கனவில் கண்டால் தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
3. பாலைவனத்தில் நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 பாலைவனத்தில் நிற்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த சில காரியங்களில் பொறுமையுடன் செயல்பட்டால் காரிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
4. வானவில்லை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 வானவில்லை கனவில் கண்டால் காரிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
5. பட்டாம்பூச்சியை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பட்டாம்பூச்சியை கனவில் கண்டால் உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையலாம் என்பதைக் குறிக்கின்றது.
6. எனது கை, கால்களை நானே வெட்டிக் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளால் உடனிருப்பவர்களின் விரோதத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.