1. வேலை செய்யும் இடத்தில் சில தவறுகளை செய்துவிட்டேன். இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று கவலையாக உள்ளது. ஏதேனும் பரிகாரம் உண்டா?
🌟 செய்த வினைக்கு ஏற்ற அதன் பலனையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதை யாராலும் மாற்ற இயலாது.
🌟 ஆகையால், அந்த வினையால் ஏற்பட இருக்கும் பாதிப்புகளை முழுவதுமாக குறைக்க இயலாது.
🌟 ஆனால், அதன் வீரியத்தன்மையை மட்டும் குறைக்க இயலும்.
🌟 அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களுக்கு சமுத்திரத்தில் மனதார இனி மேற்கொண்டு இந்த மாதிரி பிழைகளை செய்யமாட்டேன் என உறுதியோடு சமுத்திர நீரில் 18 முறை தலை முழுகி வர செய்த பாவங்கள் எல்லாம் குறையும்.
2. வீட்டில் செய்வினை இருப்பதை எப்படி அறிவது?
🌟 வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாகும்.
🌟 குடும்ப உறுப்பினர்களால் நிம்மதியற்ற சூழல் உண்டாகும்.
🌟 எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் எல்லாம் கரையும்.
🌟 பணி செய்யும் இடங்களில் பதற்றம் மற்றும் அவப்பெயர்கள் உண்டாகும்.
3. நான் துலாம் லக்னம், லக்னத்தில் சனி உள்ளது. இதற்கு என்ன பலன்? மேலும் திருமணத்தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 எண்ணிய செயலை முடிப்பதில் அதிக உழைப்பை உடையவர்கள்.
🌟 வைராக்கியம் உடையவர்கள்.
🌟 குறைவான நினைவுத்திறனை உடையவர்கள்.
🌟 திருமணத்தடை அகல வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியையும், சுக்கிரனையும் வழிபட்டு வரவும்.
🌟 மேலும், ஜாதகத்தில் ஏதாவது தோஷம் உள்ளதா? என அறிந்து அதற்கு தகுந்தாற்போல் வழிபாட்டை மேற்கொள்ளவும்.
4. மீன லக்னம் உடையவர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைய எந்த ராசிக்கல் அணிய வேண்டும்?
🌟 மீன லக்னம் உடையவர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைய புஷ்பராக ராசிக்கல் அணிய வேண்டும்.
🌟 ராசிக்கற்களை தகுந்த ஆலோசனை பெற்று அதன் அடிப்படையில் அணிவது சிறப்பு.
5. கடக லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் சனி இருந்தால் என்ன பலன்? இதற்கு பரிகாரம் உண்டா?
🌟 அதிக செலவும், தாராள மனப்பான்மையும் உடையவர்கள்.
🌟 மனதில் சில நிறைவேறாத எண்ணங்களும், அதனால் கவலைகள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
🌟 உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும்.
🌟 சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.
6. கருவளையம் அதிகமாக தெரிந்தால் என்ன பலன்?
🌟 கருவளையம் அதிகமாக தெரிந்தால் தூக்கமின்மையும், உடலில் நீர்ச்சத்துகள் குறைவாக உள்ளதையும் உணர்த்துகிறது.
7. அமாவாசை அன்று வெளிநாடு செல்லலாமா?
🌟 ஏற்கனவே திட்டமிட்ட பயணங்களாக இருப்பின் அமாவாசை அன்று வெளிநாடு செல்லலாம்.