1. தேள் கனவில் வந்து பெரியதாகி கொண்டே போனால் என்ன பலன்?
🌟தேளை கனவில் காண்பது உடல் சோர்வினால் திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
2. ஒருவர் என்னை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களுக்கிடையே ஏற்பட்ட மன வருத்தங்கள் அகலும்.
🌟எதிர்பாராத சுபச் செய்திகளால் சுப செலவுகள் உண்டாகும்.
3. கையில் போட்டு இருக்கின்ற வளையலை கழற்றி தருமாறு ஒரு பெண் என்னிடம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟இந்த மாதிரி கனவு கண்டால் உங்களது முயற்சியில் உண்டான வாய்ப்புகளால் மற்றவர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும்.
4. தந்தையுடன் சண்டைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟தந்தையுடன் சண்டைப்போடுவது போல் கனவு கண்டால் மனதில் உண்டான கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
5. தீயப் பழக்கத்தால் என் பெயர் கெடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟இதுபோன்ற கனவு வருவதற்கு காரணம் நம் மனதை நாம் கட்டுப்படுத்த இயலாமல் அதனுடைய கட்டுப்பாட்டிற்கு சென்றது தான்.
🌟எனவே, முடிந்த வரை மனதை தியானம் மூலம் நெறிப்படுத்த வேண்டும்.
🌟பயனற்ற தவறான செய்திகளை படிப்பது, பார்ப்பதை தவிர்த்து நல்ல ஆன்மீக கதைகள் கொண்ட புத்தகத்தை நாடி செல்லுங்கள்.
🌟கருட புராணத்தை படிப்பதன் மூலம் நாம் செய்யும் செயல்களால் விளையும் நன்மையையும், தீமையையும் அறிய இயலும். இது எண்ண ஓட்டங்களை தெளிவுப்படுத்தும்.
🌟மேலும், குழந்தைகளுடன் விளையாடுதல், தனிமையை தவிர்த்து நண்பர்களுடன் ஆரோக்கியமான நினைவுகளை பற்றி பேசுதல், அறிமுகம் இல்லாத புதிய கலையில் மனதை ஈடுபடுத்துதல் போன்றவற்றால் மனதில் உண்டான தவறான சிந்தனைகளையும், எண்ணங்களையும் தவிர்க்க இயலும்.
6. அடிக்கடி நாய் கனவில் வருவது நன்மையா? தீமையா?
🌟அடிக்கடி நாய் கனவில் வருவது நன்மையே. பிறரால் ஆதரவான சூழல் உண்டாகும்.