1. வீட்டில் பூஜை செய்யும்போது கற்பூர ஆரத்தி அணைந்துவிட்டது. இது நல்லதா? கெட்டதா?
🌟 வீட்டில் பூஜை செய்யும்போது கற்பூர ஆரத்தி அணைந்துவிட்டால் ஒன்றும் ஆகாது. மீண்டும் கற்பூரத்தை ஏற்றி மன நிறைவுடன் வழிபடவும்.
2. ஒரே கிழமையில் பிறந்த இருவர் திருமணம் செய்யலாமா?
🌟 ஒரே கிழமையில் பிறந்த இருவர் திருமணம் செய்யலாம்.
3. நான் விருச்சக லக்னம். லக்னத்தில் செவ்வாயும், மேஷ ராசியில் சனியும் இருந்தால் நீச பங்க ராஜ யோகமா?
🌟 விருச்சக லக்னத்தில் செவ்வாயும், மேஷ ராசியில் சனியும் இருந்தால் நீச பங்க ராஜ யோகம் இல்லை.
4. மிதுன லக்னத்திலிருந்து 4ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?
🌟 உறவினர்கள் மூலம் ஆதரவும், மகிழ்ச்சியும் உண்டாகும்.
🌟 அழகான தோற்றம் உடையவர்கள்.
🌟 வீடு மற்றும் மனையை வாங்கும் யோகம் உடையவர்கள்.
🌟 இனிமையான பேச்சுக்களை உடையவர்கள்.
5. சந்திர திசையில், குரு புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 குருபகவான் பலமாக இருக்கும் பட்சத்தில் பொருட்சேர்க்கை உண்டாகும்.
🌟 செல்வாக்கு உயரும்.
🌟 பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
🌟 உடல் ஆரோக்கியம் மேம்படும்.
🌟 குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
6. லக்னத்திலிருந்து 8ம் இடத்தில் சனி இருக்கிறது என்ன பலன்?
🌟 உறவினர்களிடம் இருந்து விலகி இருக்கக்கூடியவர்கள்.
🌟 சகோதர வகையில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.
🌟 அடிக்கடி பார்வையில் பிரச்சனைகள் ஏற்படும்.
🌟 தைரியம் உடையவர்கள்.
7. 7ல் குருவும், ராகுவும் இருந்தால் என்ன பலன்?
🌟 உயர்ந்த நோக்கங்களையும், இலட்சியங்களையும் உடையவர்கள்.
🌟 மனைவி வழியில் முன்னேற்றமான சூழல் அமையும்.
🌟 சாமர்த்தியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.
🌟 தற்பெருமை பேசுவதில் விருப்பம் உடையவர்கள்.