No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலில் பிச்சை எடுப்பதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 17, 2018   Ananthi   7715    கனவு பலன்கள் 

1. என் அண்ணன் ஒரு பிளாஸ்டிக் பாம்பை கொண்டு பயமுறுத்துவது போல் நான் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் அறிமுகமில்லாத புதிய சூழல்கள் சாதகமான வாய்ப்புகளை தரும் என்பதைக் குறிக்கிறது.

2. கோவிலில் பிச்சை எடுப்பதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலில் பிச்சை எடுப்பதுபோல் கனவு கண்டால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழலும், வாய்ப்புகளும் அமையும்.

🌟 பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

3. மடிப்பிச்சை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மடிப்பிச்சை எடுப்பது போல் கனவு கண்டால் மனதில் வெகு நாட்களாக நினைத்த காரியம் கூடிய விரைவில் நடைபெறும் என்பதனைக் குறிக்கிறது.

4. என் மனைவி குழந்தைக்கு பால் ஊட்டுவதாக நான் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 குழந்தைக்கு பால் ஊட்டுவதாக கனவு கண்டால் குடும்பத்தின் பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

5. இறந்துபோன எனது தாத்தா என் கனவில் வந்தார். அப்போது அவருக்கு வாயில் பால் ஊற்றினேன். உடனே அவர் இறந்துவிட்டார். இதற்கு என்ன பலன்?

🌟 இறந்தவர்களை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

🌟 ஆயுள் விருத்தி உண்டாகும்.



Share this valuable content with your friends