🌟 விருச்சக ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். செவ்வாயுடன், புதன் பகை கொண்டாலும் சமம் என்ற நிலையில் இருந்து தரும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
🌟 வாழ்க்கையில் பல போராட்டங்கள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் தைரியத்தையும், சாமர்த்தியத்தையும் உடையவர்கள்.
🌟 உறவுகளின் மீது பற்று இல்லாதவர்கள்.
🌟 பொது நல எண்ணங்களை விட, சுய நல எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.
🌟 தன்னை பிரபலப்படுத்தி கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள்.
🌟 எதையும் தெரியாதவர்கள் போல் இருப்பார்கள். ஆனால், அனைத்தும் தெரிந்தவர்கள்.
🌟 தனது திறமைக்கு மீறிய செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள்.
🌟 தோல்வியை கண்டு மனம் தளராதவர்கள்.
🌟 தனது லட்சியத்தின் மேல் கவனம் உடையவர்கள்.
🌟 எப்பொழுதும் ஒரு விதமான கவலையுடன் இருக்கக்கூடியவர்கள்.
🌟 வாழ்க்கையில் எதுவும் எளிமையாக கிடைக்காது. அனைத்திற்கும் போராடும் சூழ்நிலையே உண்டாகும்.
🌟 இவர்களிடம் சில நேரங்களில் முரட்டு தனமான சுபாவம் வெளிப்படும்.
🌟 பயனற்ற செலவுகளால் நெருக்கடியான பொருளாதார நிலையும், அதற்காக அடிக்கடி கடன் வாங்கும் சூழலும் உண்டாகும்.
🌟 புதியவற்றை கற்பதிலும், அதற்கான அலைச்சலும் உடையவர்கள். ஆனால், அதனால் ஏற்படும் ஆதாயம் என்பது குறைவானதாகும்.
🌟 பல துறையில் தேர்ச்சி கொண்டாலும், இவரின் அறிவு மற்றும் நுட்பம் என்பது இவருக்கு அத்தியாவசிய காலங்களில் சாதகமாக அமையாது.
🌟 கடினமான முயற்சியும், அதிகமான உழைப்பும் இருந்தாலும் இவர்கள் பெறும் இலாபம் மற்றும் மதிப்புகள் என்பவை மிகவும் சொற்பமானவை.
🌟 நல்ல அறிவும், திறமையும் இருந்தாலும் சொற்பமான வெற்றிகளையே பெறுகிறார்கள்.
🌟 அலட்சிய குணமும், எவரையும் அனுசரித்து போகாத தன்மையும் இவரை அனைவரிடத்திலும் தள்ளியே வைக்கின்றது.