1. மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆணிற்கு பெண் கொடுத்தால் பெண்ணின் தந்தை இறந்து விடுவார் என்று கூறுவது உண்மையா?
🌟 மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆணிற்கு பெண் கொடுத்தால் பெண்ணின் தந்தை இறந்து விடுவார் என்று கூறுவது உண்மையன்று.
🌟 மரணம் என்பது அவரவர் ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்தியை பொறுத்து ஏற்படக்கூடியதாகும்.
2. பெண்ணிற்கு ராகு-கேது இருந்தால், செவ்வாய் இருக்கின்ற ஆணை திருமணம் செய்யலாமா?
🌟 ராகு-கேது உள்ள ஜாதகங்களை ராகு-கேது உள்ள ஜாதகத்துடன் இணைப்பது நன்று.
3. கோவிலில் அனைவரும் பூஜை செய்யலாமா? அதே மாதிரி அம்பாளுக்கான அலங்காரங்களை கருவறைக்குள் சென்று பெண்கள் செய்யலாமா?
🌟 கோவிலில் அனைவரும் பூஜை செய்யலாம். ஆனால் அசைவ உணவை தவிர்க்கவும்.
🌟 அதே மாதிரி அம்பாளுக்கான அலங்காரங்களை கருவறைக்குள் சென்று பெண்கள் செய்வது என்பது அந்த கோவிலில் உள்ள பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கவும்.
🌟 பெண்களின் உடல்வாகு என்பது ஆண்களின் உடல்வாக்கில் இருந்து வேறுபட்டு இருக்கக்கூடியதாகும்.
4. பாரம் ஏற்றப்பட்ட வண்டியில் நானும், என் மகளும் நிற்கும்போது மேலே இருந்து கீழே விழுவது போலவும், ஆனால் எந்த ஆபத்தும் இல்லை என்பது போலவும் கனவுகண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செயல்களின் மூலம் சில மாற்றமான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
5. விண்கலம் நேராக வானத்தை நோக்கி செல்வது போலவும், அதில் ஒரு பகுதி நெருப்பாக மாறி என் மீது விழுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் செய்யும் சில மாற்றங்களின் மூலம் மேன்மையான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
6. இறந்தவர்கள் ஏதோ பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.