1. நான் கும்ப லக்னம். 2ல் குரு, புதன், சூரியன் சேர்ந்துள்ளது. எனக்கு குரு திசை நடக்கிறது. இதற்கு என்ன பலன்?
🌷 பொருளாதாரம் மேன்மை அடையும்.
🌷 பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.
🌷 உறவினர்களால் ஆதரவான சூழல் உண்டாகும்.
🌷 ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
2. சனி திசை பலன் தருமா?
🌷 நாம் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் அதற்கு உண்டான சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் சனிபகவான்.
🌷 சனி திசை நடக்கும்போது நாம் சுப வினைகள் செய்திருப்பின் சுப பலன்கள் மிகுதியாகவும், பாவச் செயல்கள் செய்திருப்பின் அதற்கு ஈடான அசுப பலன்களையும் அளிக்க வல்லவர்.
3. நான் மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். எனக்கு தொடர்ந்து பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
🌷 உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி, வீட்டிலுள்ள இறைவனை வெளியே செல்லும் போது வணங்கிவிட்டு செல்லவும்.
🌷 புதன்கிழமையும், சனிக்கிழமையும் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாளை வழிபட்டு வரவும்.
4. ஆண்களுக்கு வலது முழங்காலில் மச்சமிருந்தால் என்ன பலன்?
🌷 ஆண்களுக்கு வலது முழங்காலின் மேல் பக்கமாய் மச்சம் இருந்தால் அவர்கள் எதிலும் நேர்மையும், ஒழுக்கமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
5. சொந்த வீடு அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
🌷 திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை தரிசித்து வரவும்.
🌷 செவ்வாய்க்கிழமை தோறும் சிவப்பு மலர்களை கொண்டு செவ்வாய் பகவானை வணங்கி வழிபட்டு வரவும்.
6. செவ்வாய் பகவானும், சுக்கிர பகவானும் பத்தாம் வீடான சிம்ம ராசியில் இருந்தால் என்ன பலன்?
🌷 எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.
🌷 தொழில் திறமை உள்ளவர்கள்.
🌷 முடிவில்லாத ஆசைகளை உடையவர்கள்.
🌷 சாமர்த்தியமான செயல்பாடுகளையும், போராடும் குணமும் உடையவர்கள்.