👉 மீன ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். செவ்வாய் குருபகவானுடன் நட்பு என்ற நிலையில் நின்று அளிக்கும் சுப மற்றும் அசுப பலன் பின்வருமாறு :
👉 கல்வியில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
👉 எடுத்த முயற்சிகளில் ஆதாயம் காணக்கூடியவர்கள்.
👉 எனினும் கற்ற கல்விக்கு தொடர்பில்லாத வேலை வாய்ப்புகளே இவர்களுக்கு அமைகின்றது.
👉 அதிகாரம் கலந்தப் பேச்சுகளை உடையவர்கள்.
👉 பேசுகின்ற பேச்சுகளில் விஷயத்துடன் ஞானமும் கொண்டு இருப்பவர்கள்.
👉 கொடுத்த வாக்குறுதியை எந்நிலையிலும் நிறைவேற்றக்கூடியவர்கள்.
👉 எடுத்த முடிவுகளில் எவருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாதவர்கள்.
👉 கொள்கை பிடிப்பு குணம் கொண்டவர்கள்.
👉 குடும்பத்தின் மீது மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
👉 நம்பிக்கைக்குரியவர்கள். யாரையும் ஏமாற்றமாட்டார்கள்.
👉 மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளக்கூடியவர்கள்.
👉 எதையும் நன்கு சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
👉 அழகான ஆடை, ஆபரணங்களை அணிந்து தன்னை உயர்வாக காட்டிக் கொள்ளக்கூடியவர்கள்.
👉 இடமறிந்து முன்கோபத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும், வல்லமையும் உடையவர்கள்.
👉 மறைமுகமாக பொதுச் சேவை செய்வதில் விருப்பம் உடையவர்கள். விளம்பரத்தை விரும்பாதவர்கள்.
👉 எதிலும் துடிதுடிப்பு கொண்டவர்கள். எனினும் தனிமையை மிகவும் நேசிக்கக்கூடியவர்கள்.
👉 திருத்தல பணிகளை செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.
👉 எவராலும் கண்டறிய இயலாத சில ரகசிய செயல்பாடுகளை கொண்டவர்கள்.
👉 இத்துடன் செவ்வாய் ஒவ்வொரு ராசிகளில் நின்றால் அதனால் உண்டான சுப மற்றும் அசுப பலன்களை தெரிந்துக்கொண்டோம்.
👉 சுபர்களின் பார்வைகள் இருக்கும் பட்சத்தில் பலனில் மாற்றங்கள் ஏற்படலாம். எதிலும் அனுபவமே சிறந்த ஆசான்.
👉 நாளை முதல் கலைகளின் அதிபதியும், நாயகனுமான புதன் ஒவ்வொரு ராசியிலும் நின்று நமக்கு அளிக்கும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.