👉 ஒருவருடைய உயர்வு என்பது பிறப்பின் அடிப்படையில் இல்லை என்றும், அவரவர் முயற்சிகளில் மட்டுமே உள்ளது எனவும் இந்த வையகம் உணரும் வண்ணம் இருந்தவர் புதன் பகவான். நவகிரகத்தில் கலைகளுக்கு அதிபதியாக விளங்கக்கூடியவரும் இவரே.
👉 தன்னுடைய சுய முயற்சிகளால் ஆயக் கலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சி பெற்றவர் இவர்தான். கணிதம், நுணுக்கம் மற்றும் ஜோதிடம் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொண்டவரும் இவர்தான்.
புதன் கிரகத்தை பற்றிய சில குறிப்புகள் :
தந்தை : சந்திரன்
தாய் : தாராதேவி
உகந்த நாள் : புதன்கிழமை
புதன் பிரதி அதிபதி : மகாவிஷ்ணு
புதனின் மனைவி : நிலையாக யாரும் இல்லை. (சாபத்தால் பெண்ணாக மாறிய இளன்)
வசிக்கும் இடம் : கலையழகு நிறைந்த இடம்
வலிமை உடைய பொழுது : அனைத்து நேரங்களிலும்
ராசியை கடக்கும் காலம் : 1 மாதம்
புதனுக்கு நட்பு கிரகங்கள் : சூரியன், சுக்கிரன்
புதனுக்கு பகை கிரகம் : சந்திரன்
புதனுக்கு சமமான கிரகங்கள் : செவ்வாய், குரு, சனி, ராகு, கேது
புதனின் தசா காலங்கள் : 17 வருடங்கள்
புதனின் நட்சத்திரம் : ஆயில்யம், கேட்டை, ரேவதி
புதனின் குணங்கள் :
👉 புதன் என்பவர் சுப மற்றும் அசுப தன்மையை கொண்டவர். அதாவது இவர் முழு சுபரும் இல்லை, முழு பாபரும் இல்லை.
👉 இவரின் சுப மற்றும் அசுப தன்மையானது இவருடன் இணையும் கிரகங்களின் நிலையினைக் கொண்டதாகும்.
👉 ஒருவரின் ஜென்ம ஜாதகத்தில் புதனின் நிலை நல்ல முறையில் இருக்கும் பட்சத்தில் அவர் எல்லாவிதமான பிரச்சனைகளையும் சாதுர்யமாக பேசி தீர்த்து வாழ்க்கையில் வெற்றி அடையக்கூடியவர்.
👉 புதன் ஒவ்வொரு ராசியிலும் இருக்கும்போது அவரால் உண்டாகும் சுப மற்றும் அசுப பலன்களை இனி வரும் நாட்களில் நாம் விரிவாக காண்போம்.