No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ராசிகளில் சந்திரன் !!

Aug 01, 2018   Ananthi   439    நவ கிரகங்கள் 

👉 சூரியன் அளிக்கும் ஒளியில் நாம் புத்துணர்ச்சி அடைந்தாலும் நம் மனமானது என்றும் ஸ்திர தன்மையில்லாது தினம், தினம் பல மாற்றங்களை காண்கிறது.

👉 தோன்றும் எண்ணங்களிலும் வேறுபாடுகள் உண்டாகின்றன. ஆரோக்கிய கதிர்களை நம் உடலும், மனமும் ஏற்றாலும் சில தருணங்களில் வலிமையற்ற சூழலாகவே உள்ளது.

👉 இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் இராசிகளில் சந்திரனின் நிலையே காரணம் என்பதனை நம்மால் அறிய இயலும்.

👉 கிடைக்கும் பொன்னான சூழலை அனுபவிக்க சூரியனின் வெப்பம், சந்திரனின் குளிர்ச்சியும் இருந்தால் மட்டுமே அந்த சூழலானது இன்பமான தருணமாக அமையும்.

👉 சந்திரன் இருவிதமான நிலைகளில் காணப்படுவார். அதாவது வளர்பிறை சந்திரன் மற்றும் தேய்பிறை சந்திரன்.

👉 வளர்பிறையில் சிவபெருமானால் அளித்த வரத்தால் நன்மை செய்யும் தேவராகவும், தேய்பிறையில் தட்ச பிரஜாபதி அளித்த சாபத்தால் நிலையற்ற எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளை கொண்டவராகவும் இருப்பார். எனவே, பலன்களை அறிவதில் இதை கருத்தில் கொள்வது மிகவும் அவசியமாகும்.

👉 சந்திரன் ஜீவராசிகளின் எண்ணங்களை படைக்கும் வல்லமை கொண்ட மனதிற்கும், அதை அகத்தே கொண்டுள்ள உடலிற்கும் காரணம் ஆவார்.மேலும் தாய்க்கும் இவரே காரகர் ஆவார்.

👉 நாளை முதல் ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் நிற்கும்போது ஏற்படும் நன்மை, தீமைகளைப் பற்றி காண்போம்.


Share this valuable content with your friends