1. காதல் திருமணத்தில் ஜாதகப் பொருத்தம் இல்லை என்றால் அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?
🌟 குலதெய்வ வழிபாடு செய்துவர மேன்மையான சூழல் அமையும்.
🌟 மேலும், திருமணப் பந்தத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லவும்.
2. சந்திர கிரகணம் அன்று வாஸ்து நாளும் வந்தால் அன்று வாஸ்து செய்யலாமா?
🌟 சந்திர கிரகணம் அன்று வாஸ்து நாளும் வந்தால் அன்று வாஸ்து செய்யலாம்.
3. வீட்டுவாசலில் சங்கு பதிப்பதன் அர்த்தம் என்ன? எத்தனை சங்கு பதிக்க வேண்டும்?
🌟 வீட்டுவாசலில் சங்கு பதிப்பதன் அர்த்தம் செல்வ வளத்தையும், சுபிட்சத்தையும் அளிக்கக்கூடியதாகும். ஒரு வலம்புரிச் சங்கு பதிப்பது சிறப்பாகும்.
4. பௌர்ணமி அன்று மொட்டை அடித்து, காது குத்தலாமா?
🌟 பௌர்ணமி என்பது சுப திதி அன்று மத்தியமான சுப திதி ஆகும். எனவே, பௌர்ணமி திதியை விடுத்து மற்ற திதிகளில் மேற்கொள்வது சுபிட்சமாகும்.
5. இரண்டு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்ச மாலை திருச்செந்தூர் கடலில் தொலைந்து போனது. இது நன்மையா? தீமையா?
🌟 ருத்ராட்ச மாலை திருச்செந்தூர் கடலில் தொலைந்து போனதால் எவ்விதமான பாதிப்பும் இல்லை. கவலைக்கொள்ள வேண்டாம். புதிய மாலையை வாங்கி அணிந்து கொள்ளவும்.
6. கண் திருஷ்டி பொம்மையை வீட்டில் எங்கு வைக்கலாம்?
🌟 கண் திருஷ்டி பொம்மைகளை வீட்டின் நிலை வாசலில் வெளியே நோக்கி வைப்பது சிறப்பாகும்.
7. என் தந்தை இறந்து எட்டு மாதம் ஆகிறது. கோவிலில் அர்ச்சனை செய்யலாமா?
🌟 தந்தை இறந்தால் ஒரு வருடம் வரை மலைக்கோவிலுக்கு செல்வதும், ஆலய திருப்பணிகளை தவிர்ப்பதும் நல்லது.
8. வீட்டில் எத்தனை காமாட்சி விளக்கு ஏற்றலாம்?
🌟 வீட்டில் இரண்டு காமாட்சி விளக்குகள் ஏற்றலாம்.