1. அமாவாசை அன்று குழந்தைகளுக்கு தலைக்கு குளிக்க வைக்கலாமா?
💢 தந்தை இல்லாத பட்சத்தில் அமாவாசையன்று குழந்தைகளுக்கு தலைக்கு குளிக்க வைக்கலாம்.
2. கிருத்திகை நட்சத்திரத்தில் மொட்டை மற்றும் காது குத்து வைக்கலாமா?
💢 கிருத்திகை நட்சத்திரத்தில் செய்வதை காட்டிலும் மற்ற சுப நட்சத்திரங்களில் மொட்டை மற்றும் காது குத்து வைக்கலாம்.
3. லக்னத்திற்கு பனிரெண்டில் குருவும், கேதுவும் இருந்தால் என்ன பலன்?
💢 நல்ல ஞானம் உடையவர்கள்.
💢 வாழ்க்கை மீதான பற்று குறையும்.
💢 நல்ல பெயர் கிடைப்பது என்பது சிரமம்.
💢 உடல் நல பாதிப்புகள் அவ்வப்போது தோன்றி மறையும்.
4. 7ம் இடத்தில் குருவும், கேதுவும் இணைந்திருந்தால் என்ன பலன்?
💢 உயர்ந்த இலட்சியங்களை கொண்டவர்கள்.
💢 நினைத்த லாபம் எண்ணிய தொழிலில் அமையும்.
💢 குறைவான பேச்சுகளை கொண்டவர்கள்.
💢 அலைச்சல் அதிகம் உடையவர்கள்.
5. திருமணம் தடைபட்டு நின்றுவிட்டால் வாங்கிய தாலியை என்ன செய்ய வேண்டும்?
💢 திருமணம் தடைபட்டு நின்றுவிட்டால் வாங்கிய தாலியை கோவிலில் உள்ள அம்பாளுக்கு கொடுத்து விடலாம்.
💢 வசதி வாய்ப்பு குறைவாக உள்ள எளிமையான குடும்பத்தை சேர்ந்த திருமணமாகாத பெண்களுக்கு அளிக்கலாம்.
6. நான் கடக லக்னம், தனுசு ராசியில் சூரியனும், சுக்கிரனும் இருக்கிறது. இதற்கு என்ன பலன்?
💢 கலை ஆர்வம் மிகுந்தவர்கள்.
💢 நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
💢 போட்டிகளில் வெற்றி கொள்வார்கள்.
💢 மறைமுகமான எதிரிகளை கொண்டவர்கள்.
7. என் மகன் கடக லக்னம், மூன்றாம் வீடான கன்னியில் குருவும், சனியும் இணைந்திருக்கிறது. இதற்கு என்ன பலன்?
💢 எண்ணம் போல வாழக்கூடியவர்கள்.
💢 பிரயாணங்களில் விருப்பம் கொண்டவர்கள்.
💢 ஆணவம் கொண்டவர்கள்.
💢 எதற்கும் கலங்காத மன உறுதி உடையவர்கள்.