1. என்னுடைய ராசி துலாம் ராசி, எனக்கு சொந்த புத்தி கைக்கொடுக்குமா? சொல் புத்தி கைக்கொடுக்குமா?
🌟 துலாம் ராசி என்பது சர ராசியாகும். சொந்த புத்தி, சொல் புத்தி ஆகிய இரண்டும் கைக்கொடுக்கும்.
🌟 அதாவது ஒரு செயலை செய்வதற்கு முன் பலரிடம் ஆலோசனைகள் கேட்டு செயல்படுத்தும்போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தங்களது முடிவுகளில் மாற்றம் செய்து நடைமுறைப்படுத்துவீர்கள்.
2. எந்தக்கிழமைகளில் கால சர்ப்ப தோஷ பரிகாரம் செய்ய வேண்டும்?
🌟 கால சர்ப்ப தோஷ பரிகாரத்தை ஜென்ம நட்சத்திரம் வரும் கிழமை மற்றும் பஞ்சமியில் செய்வது சிறப்பான பலனை அளிக்கும்.
3. செவ்வாய்க்கிழமையில் வாகனம் எடுக்கலாமா?
🌟 செவ்வாய்க்கிழமைகளை விடுத்து வெள்ளிக்கிழமைகளில் வாகனம் எடுக்கலாம்.
4. விளக்கு தானாக அணைய வேண்டுமா? அல்லது நாம் தான் விளக்கை அணைக்க வேண்டுமா?
🌟 கோவிலில் ஏற்றிய விளக்குகள் தானாக அணையலாம்.
🌟 ஆனால், வீட்டில் ஏற்றிய விளக்கு தானாக அணையக்கூடாது.
5. ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
🌟 ஒரே நட்சத்திரத்தில் உள்ள ஒரே பாதத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்ய வேண்டாம்.
🌟 ஒரே நட்சத்திரத்தில் வௌ;வேறு அதாவது ஒருவருக்கு அந்தமாகவும், மற்றொருவருக்கு ஆதியாகவும் இருக்க பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.
6. 7ல் புதன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?
🌟 ஒரே நேரத்தில் பல செயல்கள் செய்யும் திறமை கொண்டவர்கள்.
🌟 வாதத்திறமையில் வல்லவர்கள்.
🌟 வீடு, வாகன வசதி மேம்படும்.
🌟 விரும்பிய இடத்தில் மண வாழ்க்கை அமையும்.
7. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?
🌟 திடமான உடல்வாகு உடையவராக இருப்பார்கள்.
🌟 கல்வியில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
🌟 தைரியமானவர்களாக இருப்பார்கள்.
🌟 அமைதியான நடவடிக்கை உடையவர்கள்.
8. அமாவாசை விரதம் என்றால் என்ன?
🌟 அமாவாசையன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, வீடு முழுவதையும் கல் உப்பினை கலந்த நீரினால் சுத்தம் செய்ய வேண்டும்.
🌟 வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். பின் வீட்டின் அருகாமையிலுள்ள அல்லது மனதிற்கு பிடித்த கோவிலுக்கு சென்று வந்த பின்பு உணவு உண்ணவும்.
🌟 உடல் நிலைக்கு தகுந்தவாறு விரதத்தை கடைபிடிக்கவும்.
🌟 பின் பூண்டு, வெங்காயம் இல்லாத சாத்வீக உணவுகளை உண்ண வேண்டும்.
🌟 அமாவாசை தினங்களில் அசைவ உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது.