1. 7ல் செவ்வாய் மற்றும் கேது இணைந்து இருந்தால் என்ன பலன்?
🌟 அதிக கோபப்படக்கூடியவர்கள்.
🌟 சண்டை போடுவதில் வல்லவர்கள்.
🌟 அலைச்சல் அதிகம் கொண்டவர்கள்.
🌟 எதிர்பார்த்த திருமண வாழ்க்கை அமைய கால தாமதமாகும்.
2. எந்த மாதத்தில் குழந்தை பிறக்கலாம்?
🌟 எல்லா மாதத்திலும் குழந்தை பிறக்கலாம்.
🌟 குழந்தை பிறப்பிற்கு லக்னம் என்பதே முதன்மையானதாகும்.
3. லக்னத்திற்கு 11ம் இடத்தில் குரு, ராகு, புதன் இருந்தால் என்ன பலன்?
🌟 ரகசிய நடவடிக்கை உடையவர்கள்.
🌟 இசையின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
🌟 பலவகைகளில் இலாபம் அடையக்கூடியவர்கள்.
🌟 தைரியமான செயல்பாடுகளை உடையவர்கள்.
4. பஞ்சாங்கம் என்றால் என்ன?
🌟 பஞ்சாங்கம் என்பது ஜோதிட கணிப்புகளுக்கு தேவையான பஞ்ச அங்கங்களை அதாவது ஐந்து அங்கங்கள் கொண்டதாகும்.
🌟 ஐந்து அங்கங்கள் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம் மற்றும் யோகம் ஆகும்.
5. அமாவாசையில் திருஷ்டி கழிக்கலாமா?
🌟 அமாவாசையில் திருஷ்டி கழிக்கலாம். மற்ற நாட்களை விட அமாவாசையில் செய்வது மிகச் சிறப்பாகும்.
6. வீட்டில் உள்ள பிரம்மாவின் படம் தீப்பற்றி எரிந்துவிட்டது. இதனால் ஏதாவது பாதிப்பு உண்டாகுமா?
🌟 வீட்டில் உள்ள பிரம்மாவின் படம் தீப்பற்றி எரிந்தால் இதனால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
🌟 கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளால் எந்தவிதமான பாதிப்பும் உண்டாகாது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
🌟 எரிந்த படத்தினை வீட்டில் வைக்காமல் அப்படத்தினை எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதை ஆற்றில் விடவும்.
🌟 புதிய படத்தினை வாங்கி வைத்து வழிபடவும்.
7. ஜோதிடத்தில் ஒன்றாம் பாதம், இரண்டாம் பாதம் என்று சொல்கிறார்களே அது பற்றி எனக்கு தெளிவாக கூறவும்.
🌟 ஒரு ராசி என்பது முப்பது பாகைகள் கொண்டதாகும். பனிரெண்டு ராசிகள் வீதம் மொத்தம் முந்நூற்றி அறுபது பாகைகள் உடையது.
🌟 இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் பனிரெண்டு ராசிகளுக்கும் சம விகிதத்தில் பிரித்து கொடுக்க ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
🌟 இருபத்தி ஏழு நட்சத்திரங்களை நான்கு பாதகங்களாக பிரிக்கும்போது மொத்தம் 108 பாதங்கள் ஆகும்.
🌟 இந்த 108 பாதங்கள் சமமாக பங்கிடும் போது ஒவ்வொரு ராசிகளும் ஒன்பது பாதங்களை கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது.
🌟 ஒரு ராசியின் மொத்த பாகையை ஒன்பதால் வகுக்க கிடைப்பது அதாவது ஒரு நட்சத்திர பாதத்தின் அளவு 13 பாகை இருபது கலை ஆகும்.
🌟 எனவேதான், சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சாரம் செய்கிறார்.