No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பணப்பிரச்சனை தீர வாஸ்துப்படி என்ன தீர்வு?

Jul 06, 2018   Dharani   669    வாஸ்து 

வாஸ்து பார்த்து வீடு கட்டியிருந்தாலும் பணப்பிரச்சனை ஏற்படுகிறதா? அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகளை பற்றி பார்ப்போம்.....

பணப்பிரச்சனை :

வீட்டை வாஸ்துப்படி கட்டியிருந்தாலும் பரவாயில்லை, அதில் இங்கு குறிப்பிடும்படியான அமைப்புகளை சரிசெய்து கொண்டால் பணவரவு ஏற்படும்.

1. வடக்கு ஜன்னலை 24 * 7 நாட்களும் திறந்தே இருக்க வேண்டும். குப்பைகள், தூசுக்கள் வீட்டினுள் வரவேண்டும்.

2. ஜன்னலில் ஸ்க்ரீன் போட்டிருந்தால் எடுத்து விட வேண்டும்.

3. வடக்கு முழுவதும் அடைபட்ட பந்தல் போட்டிருந்தால் எடுத்து விட வேண்டும்.

4. வடக்கு பகுதியில் உயரமான மரம் இருந்தால் கிளைகளை வெட்டிவிட வேண்டும்.

5. வடக்கு பகுதியில் காரை நிறுத்தி இருந்தால், சிறிது காலத்திற்கு வேறு இடத்தில் மாற்றி நிறுத்த வேண்டும்.

6. வீட்டினுள் தென்மேற்கில் மட்டுமே பீரோ, லாக்கர் அமைப்பு இருக்க வேண்டும். அதுவும் வடக்கு திசையை பார்ப்பது போல் மட்டுமே இருப்பது சிறப்பு.

7. வடகிழக்கு Hall-ல் சோபா செட் போட்டிருந்தால், வேறு இடத்திற்கு மாற்றி வைக்கவும்.

8. வடகிழக்கு Hall-ல் டைனிங் டேபில் போட்டிருந்தால் வேறு இடத்திற்கு மாற்றி வைக்கவும்.

9. வடகிழக்கில் பூஜையறை இருந்தால், அதை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, அந்த பூஜையறையில் வடகிழக்கு ஜன்னலை 24 * 7 நாட்களும் திறந்து வைக்க வேண்டும்.

10. தென்மேற்கு பகுதியில் பூஜையறை இருந்தால், அதை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு அந்த இடத்தை மாஸ்டர் பெட்ரூமாக பயன்படுத்தவும்.

இந்த அமைப்புகள் உங்களது வீட்டில் மற்றும் அலுவலகத்தில் இருக்குமானால் மாற்றி அமைத்து பாருங்கள் நிச்சயமாக பணவரவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

ஆன்மிக ரீதியாக பணவரவுக்கான வழிகள் :

1. பசுமாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது.

2. எறும்புக்கு நாட்டு சர்க்கரை வைப்பது.

3. அன்னதானம் கொடுப்பது.

4. வஸ்திர தானம் கொடுப்பது.

5. துர்க்கையை வெள்ளிக்கிழமை இரவு 8-9 மணிக்கு நெய் தீபம் போட்டு வழிபடுவது.

6. குளிகை நேரத்தில் மட்டும் பணத்தை மற்றவர்களுக்கு கொடுப்பது.

7. மகாலட்சுமியின் மந்திரத்தையும், லட்சுமி நரசிம்மர் ஸ்லோகத்தையும் தினமும் பாராயணம் செய்வது.

இவைகளையும் முயற்சி செய்து பாருங்கள் பணவரவில் மாற்றங்கள் நிகழும்.


Share this valuable content with your friends


Tags

thevarkal poojaroom இந்த மூன்று கிரகங்கள்... சேர்ந்து இருந்தால்.. எதிலும் திறமையாக இருப்பார்கள்..!! லக்னத்தில் சந்திரன் சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் பங்குனி மாதம் வளைகாப்பு நடத்தலாமா? ஜனவரி read முயல் விளையாடி கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? ஆப்ரேஷன் சிம்ம ராசி உடையவர்கள் எந்த ராசிக்கற்களை அணிய வேண்டும்? april 15 Today Horoscope - 14.07.2018 உங்கள் லக்னத்திற்கு ... எந்த ராசிக்கல் அணிய வேண்டும்?... என்பதில் சந்தேகமா? 09.12.2019 Rasipalan in pdf format!! மாலை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? akeni ganesahan தெற்கு நோக்கி பூஜை அறையை வைக்கலாமா?