🌻 அனுஷம் நட்சத்திரத்தன்று மாம்பூவால் சிவபெருமானிற்கு அர்ச்சனை செய்து வணங்கி விட்டு, தொழில் செய்வதற்கு தேவையான இரும்பு இயந்திரங்கள், அச்சு எந்திரங்கள் வாங்கினால், தொழில் பலவிதமாக பெருகி நன்கு வளர்ச்சி அடையும்.
🌻 அஸ்வினி நட்சத்திரத்தன்று சூரிய பகவானிற்கு சூரிய காந்திப் பூவை வைத்து வணங்கிவிட்டு உயர் அதிகாரிகளை, தன்னைவிட உயர்ந்தவர்களை சந்தித்தால் காரிய அனுகூலம் உண்டாகும்.
🌻 திருவோணம் நட்சத்திரத்தன்று பெருமாள் கோவிலுக்கு சென்று, பவளமல்லியால் அர்ச்சனை செய்துவிட்டு வெளிநாடு பயணம் மேற்கொண்டால் வெற்றியுடன் திரும்பலாம்.
🌻 அதேபோல் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளிற்கு பவள மல்லியால் அர்ச்சனை செய்து வணங்கி விட்டு, வீடு, நிலம் வாங்க சென்றால் வெற்றி கிடைக்கும்.
🌻 பூசம் நட்சத்திரத்தன்று பெருமாளிற்கு சாமந்திப்பூவை வைத்து வழிபட்டால் நோய் நீங்கும்.
🌻 அஸ்தம் நட்சத்திரத்தன்று பார்வதி தேவிக்கு தாழம்பூவின் முனை மேல் நோக்கியவாறு வைத்து அர்ச்சித்துவிட்டு தங்க நகைகள் வாங்குவதற்கும், பெண் பார்ப்பதற்கும் சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
🌻 மிருகசீரிஷ நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு முருங்கை மலர்கள் சூட்டி வணங்கிவிட்டு, அதில் இருந்து சில மலர்களை கையில் எடுத்துக் கொண்டு வாகனங்கள், கால்நடைகள் வாங்க சென்றால் அடிக்கடி வாகனங்கள், கால்நடைகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
🌻 மூலம் நட்சத்திரத்தன்று விநாயகருக்கு அருகம்புல், செம்பருத்தி வைத்து வழிபட்டால் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் தடங்கலின்றி நிறைவேறும்.
🌻 அவிட்டம் நட்சத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு அகத்தி மலர்களால் அர்ச்சனை செய்து வணங்கிவிட்டு பயணம் மேற்கொண்டால் விபத்துகள் ஏற்படாது.