No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூஜையின்போது தவிர்க்க வேண்டியவை..!

Jun 21, 2018   Dharani   392    ஆன்மிகம் 

👉 வீட்டில் தெய்வங்களின் படங்களை வைத்து வழிபடும்போது, பூஜைக்கு பயன்படுத்தும் சுவாமி படங்கள், பாத்திரங்களை தினமும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை.

👉 சுவாமி படங்கள், பாத்திரங்கள் மீது தூசு படிந்திருந்தால் மட்டும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் போதுமானது.

👉 அதேபோல் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு சில பொருட்களை கொண்டு அர்ச்சனை செய்யக்கூடாது.

👉 அந்த வகையில் மகா விஷ்ணுவிற்கு அட்சதை கொண்டு அர்ச்சனை செய்யக் கூடாது.

👉 விநாயகருக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடாது.

👉 சரஸ்வதி தேவியைப் பவளமல்லியால் அர்ச்சனை செய்தல் கூடாது.

👉 பைரவருக்கு மல்லிகைப்பூவினால் அர்ச்சனை செய்தல் கூடாது.

👉 சிவ பெருமானுக்கு தாழம்பூவினால் அர்ச்சனை செய்தல் கூடாது.

👉 சூரிய பகவானை விலவ இலை கொண்டு அர்ச்சனை செய்யக் கூடாது.

👉 துர்க்கை அம்மனை அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்தல் கூடாது.

👉 மகா லஷ்மியை தும்பைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்தல் கூடாது.

👉 மகா விஷ்ணுவிற்கு ஊமத்தை பூவாலும், எருக்கம் பூவாலும் அர்ச்சனை செய்தல் கூடாது.


Share this valuable content with your friends