1. திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசித்தப் பிறகு மற்ற கோவில்களுக்கு செல்லலாமா?
🌟 திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசித்தப் பிறகு மற்ற கோவில்களுக்கு செல்லலாம்.
2. வீட்டில் பணவரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
🌟 வீட்டை துர்நாற்றமின்றி நறுமணத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
🌟 பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி வைத்திருக்க வேண்டும்.
🌟 வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல்லாம் சிதறி கிடக்காமல் அதற்கான இடத்தில் இருந்தால் அங்கு செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.
3. பூஜையறை எந்த அளவில் இருக்க வேண்டும்?
🌟 மனையின் வசதிக்கு ஏற்ப சதுர வடிவில் பூஜையறையை அமைத்துக்கொள்ளவும்.
4. பல்லிகளின் ஓசைக்கு என்னென்ன பலன்கள் உள்ளது?
🌟 பல்லிகளின் ஓசையை வைத்து உறவினர் வருகை, சுப நிகழ்ச்சி, பயணம் மற்றும் வம்பு வழக்கு ஆகியவற்றை பற்றி அறிந்துக்கொள்ள முடியும்.
5. நான் கும்ப லக்னம். லக்னத்தில் புதன், சூரியன், சனி மற்றும் செவ்வாய் ஒரே கட்டத்தில் உள்ளது. இதற்கு என்ன பலன்?
🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.
🌟 பணிகளில் மேன்மை உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. நான் மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். எந்த செயலை செய்தாலும் தடங்கல் ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்வது?
🌟 சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடவும்.
🌟 தினமும் விநாயகரை வழிபட்டு, பின் புதிய செயல்களை மேற்கொள்ளவும்.