No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனை பாதிக்கும் வகையிலான ஒரு காட்சி..!!

Apr 19, 2023   Ramya   113    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனை பாதிக்கும் வகையிலான ஒரு காட்சி..!!

🌟 நந்தட்டனின் பதிலை கேட்ட சீவகன் சிரித்து கொண்டே பிள்ளைகள் அனைவரும் நலம் தானே! என்றான்.

🌟 பிள்ளைகள் அனைவரும் நலமாகவும், சுகமாகவும் குருகுலத்தில் படித்து கொண்டிருக்கின்றார்கள். காந்தருவதத்தையினுடைய மகனான சச்சந்தன் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கி கொண்டிருக்கின்றான். குணமாலையின் மகனான சுதஞ்சணன் மந்திர, தந்திரங்களில் ஆர்வம் கொண்டு, அதில் அவனை யாராலும் வெற்றி கொள்ள முடியாத அளவில் சிறந்தவனாக விளங்கி கொண்டிருக்கின்றான். பதுமையின் மகனான தரணி அவன் அம்மாவை போலவே விளையாட்டு விஷயங்களில் மிகுந்த ஆர்வத்துடனும், சுட்டித்தனமாகவும் இருக்கின்றான். கேமசரியின் மகனான கந்துக்கடன் அவன் தாயை போலவே கணக்கில் சிறந்தவனாகவும், கெட்டிக்காரனாகவும் இருக்கின்றான் என்று கூறினான் நந்தட்டன்.

🌟 உடனே சீவகன் ஆமாம்! மற்ற குழந்தைகளான விசயன், தத்தன், பரதன், கோவிந்தன் ஆகியோர் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? என்று வினவினான்.

🌟 அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு கல்வி கற்பதில் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் கூடிய விரைவில் அரச பொறுப்புகளை ஏற்று கொள்வதற்கு கூட அனைவரும் தயாராக இருப்பார்கள் என்று தான் எண்ணுகின்றேன் என்று கூறினான் நந்தட்டன்.

🌟 புன்னகைத்து கொண்டே மகிழ்ச்சியான செய்தியை தான் கூறியிருக்கின்றாய்! என்று சீவகன் கூறினான்.

🌟 இதைக் கேட்ட பின்பு தான் நந்தட்டனுக்கு இருந்த பதற்றம் குறைந்து நிதானமாக செயல்படத் தொடங்கினான். ஆமாம்! தேவியர் அனைவரும் எப்படி இருக்கின்றார்கள் நலந்தானே என்று வினவினான் நந்தட்டன்.

🌟 அவர்கள் அனைவரும் நலமாக தான் இருக்கின்றார்கள். என்ன அவர்களுடைய புதல்வர்கள் அனைவரும் பாடசாலையில் இருப்பதினால் ஒருவித ஏக்கங்கள் இருந்தாலும், அதை வெளிப்படுத்தாமல் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். நான் இதைக் கூறுவதற்கு மட்டும் உன்னை அழைக்கவில்லை.


🌟 நேற்று தேவியர்கள் அனைவருடனும் அருவிக்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு சோலையில் கண்ட ஒரு காட்சி என் மனதில் மிகுந்த ஒரு மாற்றத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியது. அதை பற்றி பேச தான் உன்னை இங்கு வரவழைத்திருக்கின்றேன் என்று கூறினான் சீவகன்.

🌟 சீவகனின் மனதை பாதிக்கும் வகையிலான ஒரு காட்சியா... அந்த சோலையில் என்ன நடந்திருக்கும்? என்பதை மனதில் எண்ணி கொண்டே சீவகன் கூறுவதை கேட்க தொடங்கினான்.

🌟 சோலையில் மனிதர்கள் நடமாட்டம் ஏதும் இல்லாத ஒரு பகுதியில் இரண்டு குரங்குகள் அமர்ந்திருந்தன. பார்ப்பதற்கு என்னவோ இரண்டு குரங்குகளும் ஒன்றையொன்று விரும்புவது போல இருந்தது. பெண் குரங்கை ஏதாவது ஒரு விதத்தில் மயக்க வேண்டும் என்ற முயற்சியில் ஆண் குரங்கு பலவிதமான வித்தைகளை செய்து கொண்டே இருந்தது.

🌟 ஆனாலும் அந்த பெண் குரங்கு எந்தவொரு வித்தைக்கும் மயங்கவில்லை. அதற்கு பதிலாக ஒருவித ஏக்கத்துடன் இருப்பதை பார்த்ததும், ஆண் குரங்கு உடனே ஒரு பலா மரத்தில் ஏறி அங்கிருந்து ஒரு பழத்தை பறித்து தோலை பாறையில் உரசி கடுமையான பகுதிகள் அனைத்தையும், அகற்றிவிட்டு சுளையை மட்டும் எடுத்து பெண் குரங்குக்கு கொடுக்க வந்தது. அப்பொழுது அவ்விடத்திற்கு ஒரு வேடன் வந்தான் என்று கூறிவிட்டு தொடர்ந்து கூறுவதை நிறுத்தி விட்டான்.


Share this valuable content with your friends


Tags

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் 06.05.2019 Rasipalan in pdf Format!! யானையை கனவில் கண்டால் என்ன பலன்? மல்லிகை மனதிற்கு பிடித்தவரை பார்க்க துடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிழக்கு பகுதியில் உயரமான கட்டிடங்கள் வருவது துலாம் ராசியில் சூரியன் லக்னத்திலிருந்து 3-ல் சந்திரன் சீவகனும் அநங்கமா வீணையும் தீபவளியன்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்! Tennis விரயச் சனி.! தேய்பிறை சஷ்டி பாம்பை அடித்துக் கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? எட்டு திசைகளிலும் விளக்கு ஏற்றுவதனால் என்ன பலன்கள் இரவில் இறந்தவர்கள் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்தில் இருந்து 4-ல் சனி இருந்தால் என்ன பலன்?. Viratham 02.03.2019 Rasipalan in pdf format!! Saturday Horoscope - 14.07.2018