சீவக சிந்தாமணி... நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ராசமாபுரத்திற்கு சென்ற சீவகன்...!!
🌟 சுரமஞ்சரி காத்திருப்பதாக கூறியதும் அங்கிருந்து புறப்பட்ட சீவகன் யாரும் அறிந்திடா வேடத்தில் தன்னுடைய வீட்டிற்கு சென்றான்.
🌟 வீட்டில் அனைவரும் இருந்தாலும் புதியதாக ஒருவன் வீட்டிற்குள் நுழைகின்றான் என்பது கூட தெரியாமல் மரம் போல் அமைதியாக இருந்தார்கள்.
🌟 இங்கு அவன் தாய் அவன் நினைவாக அழுது கொண்டிருக்க, அவர்களின் அருகில் சென்ற சீவகன் தன்னுடைய பழைய உருவத்திற்கு மாறினான்.
🌟 தன் அருகில் தன் மகன் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் சீவகனின் தாயால் நம்ப முடியவில்லை. ஓ என் கண்ணே! என்னிடம் மீண்டும் வந்து விட்டாயா? உன்னை இனிமேல் காண முடியாதா? என்று ஏங்கி கொண்டிருந்தேன். இவ்வளவு நாட்களாக என்னை விட்டு எங்கே சென்றாய்? என்று கண்களில் கண்ணீர் வழிய கேட்டார்.
🌟 அப்பொழுது தான் அவர்கள் வீட்டில் இருந்த அனைவரும் சீவகன் வந்திருப்பதை அறிந்தார்கள். அவனை பார்த்ததும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லையில்லாத அளவில் இருந்தது.
🌟 சீவகனின் தாய் எழுப்பிய கூச்சலில், அருகில் இருந்த உறவினர்கள் அனைவரும் என்ன நிகழ்ந்தது? என்று அவர்களை பார்ப்பதற்காக வந்தார்கள். அப்பொழுது சீவகன் நிற்பதை பார்த்ததும் அவர்கள் அனைத்தையும் புரிந்து கொண்டார்கள். பின் உறவினர்கள் அனைவரும் ஒவ்வொருவராக சீவகனின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள்.
🌟 கந்துக்கடனுக்கு சீவகன் உயிரோடு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் நின்று கொண்டிருந்தார். அதாவது, சீவகன் வந்திருப்பது ஒற்றர்கள் மூலமாக அரசருக்கு தெரிந்தால் பிரச்சனைகள் இன்னும் விபரீதமாகுமே...
🌟 உறவினர்களோ இதை எதையும் புரிந்து கொள்ளாமல் இப்படி வந்து கொண்டிருக்கிறார்கள். வந்திருப்பவர்களை வர வேண்டாம் என்று சொல்லவும் அவரால் இயலவில்லை. மனதளவில் துன்பங்கள் அவரை வாட்டினாலும், அதை வெளிப்படுத்தாமல் வந்திருப்பவர்களிடம் கனிவாக பேசி விரைவாக கிளம்பும் படியான சூழ்நிலையை உருவாக்கினார்.
🌟 அப்பொழுது அவருடைய நெருக்கடியான சூழ்நிலைகளை புரிந்து கொண்ட உறவினர் ஒருவர், எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். சீவகன் வந்திருப்பது அரசருக்கு தெரிய போவதில்லை. இப்பொழுது நாங்கள் அனைவரும் வந்து கொண்டிருக்கிறோம் என்றாலும், அதற்கும் ஒரு வதந்தியை உருவாக்கி இருக்கின்றோம் என்று கூறினார்.
🌟 என்னது வதந்தியா! என்ன வதந்தியை உருவாக்கி இருக்கின்றீர்கள்? என்று கேட்டார் கந்துக்கடன்.
🌟 அது ஒன்றுமில்லை... இன்று உனது தந்தைக்கு நினைவு நாள் என்றும், அதனால் தான் உறவினர்கள் அனைவரும் உன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் கூறியிருக்கின்றேன். அதுமட்டுமல்லாமல் நம் உறவினர்கள் அனைவரிடத்திலும் இதை தான் கூற வேண்டும் என்றும் கூறியிருக்கின்றேன் என்று கூறினார்.
🌟 இதை கேட்ட பிறகு தான் கந்துக்கடனுக்கு நிம்மதியாக இருந்தது. பின் அவரை பார்த்து நல்ல வேலையை செய்திருக்கின்றாய் என்று பாராட்டினார்.
🌟 பின் சீவகன் உறவினர்கள் யாரும் இல்லாத தருணத்தில் தனது தாய் மற்றும் தந்தையிடம், இதுவரை நிகழ்ந்த நிகழ்வுகளையும், தன்னுடைய பிறப்பை பற்றியும் விளக்கமாக கூறினான்.
ரிஷப ராசி கவலைப்படாதவர்கள். கோள் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? நாய் துரத்துவது போல் shiva perumaan navakiragham ஐய்யனார் மற்றும் காளிதேவியை கனவில் கண்டால் என்ன பலன்? துணி அடித்து செல்வது ஜோதிடத்தில் சொல்லப்படும் தகவல்கள் அறிவியல் பூர்வமாக உண்மையானதா? Grand father சுக்கிரன் மற்றும் சந்திரன் இருந்தால் எலியை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாழை மரத்திலிருந்து பழம் டிசம்பர் 11 ஞாயிற்றுக்கிழமையில் ருதுவானால் என்ன பலன்? ஆண் குழந்தைகளை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்? காதலியுடன் கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (01.06.2020) தவம்