No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ராசமாபுரத்திற்கு சென்ற சீவகன்...!!

Apr 04, 2023   Ramya   115    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ராசமாபுரத்திற்கு சென்ற சீவகன்...!!

🌟 சுரமஞ்சரி காத்திருப்பதாக கூறியதும் அங்கிருந்து புறப்பட்ட சீவகன் யாரும் அறிந்திடா வேடத்தில் தன்னுடைய வீட்டிற்கு சென்றான்.

🌟 வீட்டில் அனைவரும் இருந்தாலும் புதியதாக ஒருவன் வீட்டிற்குள் நுழைகின்றான் என்பது கூட தெரியாமல் மரம் போல் அமைதியாக இருந்தார்கள்.

🌟 இங்கு அவன் தாய் அவன் நினைவாக அழுது கொண்டிருக்க, அவர்களின் அருகில் சென்ற சீவகன் தன்னுடைய பழைய உருவத்திற்கு மாறினான்.

🌟 தன் அருகில் தன் மகன் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் சீவகனின் தாயால் நம்ப முடியவில்லை. ஓ என் கண்ணே! என்னிடம் மீண்டும் வந்து விட்டாயா? உன்னை இனிமேல் காண முடியாதா? என்று ஏங்கி கொண்டிருந்தேன். இவ்வளவு நாட்களாக என்னை விட்டு எங்கே சென்றாய்? என்று கண்களில் கண்ணீர் வழிய கேட்டார்.

🌟 அப்பொழுது தான் அவர்கள் வீட்டில் இருந்த அனைவரும் சீவகன் வந்திருப்பதை அறிந்தார்கள். அவனை பார்த்ததும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லையில்லாத அளவில் இருந்தது.


🌟 சீவகனின் தாய் எழுப்பிய கூச்சலில், அருகில் இருந்த உறவினர்கள் அனைவரும் என்ன நிகழ்ந்தது? என்று அவர்களை பார்ப்பதற்காக வந்தார்கள். அப்பொழுது சீவகன் நிற்பதை பார்த்ததும் அவர்கள் அனைத்தையும் புரிந்து கொண்டார்கள். பின் உறவினர்கள் அனைவரும் ஒவ்வொருவராக சீவகனின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள்.

🌟 கந்துக்கடனுக்கு சீவகன் உயிரோடு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் நின்று கொண்டிருந்தார். அதாவது, சீவகன் வந்திருப்பது ஒற்றர்கள் மூலமாக அரசருக்கு தெரிந்தால் பிரச்சனைகள் இன்னும் விபரீதமாகுமே...

🌟 உறவினர்களோ இதை எதையும் புரிந்து கொள்ளாமல் இப்படி வந்து கொண்டிருக்கிறார்கள். வந்திருப்பவர்களை வர வேண்டாம் என்று சொல்லவும் அவரால் இயலவில்லை. மனதளவில் துன்பங்கள் அவரை வாட்டினாலும், அதை வெளிப்படுத்தாமல் வந்திருப்பவர்களிடம் கனிவாக பேசி விரைவாக கிளம்பும் படியான சூழ்நிலையை உருவாக்கினார்.

🌟 அப்பொழுது அவருடைய நெருக்கடியான சூழ்நிலைகளை புரிந்து கொண்ட உறவினர் ஒருவர், எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். சீவகன் வந்திருப்பது அரசருக்கு தெரிய போவதில்லை. இப்பொழுது நாங்கள் அனைவரும் வந்து கொண்டிருக்கிறோம் என்றாலும், அதற்கும் ஒரு வதந்தியை உருவாக்கி இருக்கின்றோம் என்று கூறினார்.

🌟 என்னது வதந்தியா! என்ன வதந்தியை உருவாக்கி இருக்கின்றீர்கள்? என்று கேட்டார் கந்துக்கடன்.

🌟 அது ஒன்றுமில்லை... இன்று உனது தந்தைக்கு நினைவு நாள் என்றும், அதனால் தான் உறவினர்கள் அனைவரும் உன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் கூறியிருக்கின்றேன். அதுமட்டுமல்லாமல் நம் உறவினர்கள் அனைவரிடத்திலும் இதை தான் கூற வேண்டும் என்றும் கூறியிருக்கின்றேன் என்று கூறினார்.

🌟 இதை கேட்ட பிறகு தான் கந்துக்கடனுக்கு நிம்மதியாக இருந்தது. பின் அவரை பார்த்து நல்ல வேலையை செய்திருக்கின்றாய் என்று பாராட்டினார்.

🌟 பின் சீவகன் உறவினர்கள் யாரும் இல்லாத தருணத்தில் தனது தாய் மற்றும் தந்தையிடம், இதுவரை நிகழ்ந்த நிகழ்வுகளையும், தன்னுடைய பிறப்பை பற்றியும் விளக்கமாக கூறினான்.


Share this valuable content with your friends