சீவக சிந்தாமணி... சுரமஞ்சரியை சந்தித்த சீவகன்..!!
🌟 அருகில் இருந்த மற்றொரு காவலன், அவரை செல்ல விடு.. அடுத்து இருக்கக்கூடிய பெண் காவலர்களே என்ன செய்வது என்று முடிவு செய்து கொள்ளட்டும் என்று கூறினான்.
🌟 இதை கேட்டதும் அந்த காவலன், இன்று வயதானவருக்கு ஏதோ அதிர்ஷ்டம் இருக்கிறது என்று கூறிக்கொண்டே அவரை உள்ளே விட்டான்.
🌟 காவலர்கள் வயதானவரை செல்ல விட்டதும், அவர் (சீவகன்) ஆடி அசைந்து பெண்கள் பாதுகாத்து கொண்டிருக்கக்கூடிய பகுதிக்கு சென்றார். அங்கு இருக்கக்கூடிய பெண் காவலர்கள், வயதானவரே! நீங்கள் இங்கெல்லாம் வரக்கூடாது என்று அங்கு இருப்பவர்கள் கூறினார்களா? இல்லையா? என்று கேட்டார்கள்.
🌟 அந்த வயதானவர் பெண் காவலாளிகள் கூறிய எதையும் கேட்காமல் உள்ளே சென்று கொண்டிருந்தார்.
🌟 முன்னேறி கொண்டிருந்த வயதானவரை தடுத்து நிறுத்திய பெண் காவலாளி ஒருத்தி, இவரை என்ன செய்வது? என்று சிறிது நேரம் யோசித்தாள்.
🌟 பின் நான் சென்று சுரமஞ்சரியிடம் இவரை பற்றி கூறுகிறேன். அவர்கள் எடுக்க போகும் முடிவினை கொண்டு வயதானவரை அனுமதிப்போம் என்று மற்றொரு பெண் காவலாளியிடம் கூறிவிட்டு, சுரமஞ்சரி இருக்கும் இடத்தை நோக்கி அந்த பெண் காவலாளி சென்றாள்.
🌟 இங்கே வயதான தோற்றம் கொண்ட சீவகன், நான் எண்ணிய திட்டம் போலவே எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்று நினைத்து மனதிற்குள்ளே சிரித்து கொண்டான். ஆனால் அவனுடைய விழிகள் இரண்டும் சுரமஞ்சரியின் வரவுக்காக காத்து கொண்டிருந்தது.
🌟 உள்ளே சென்ற பெண் காவலாளி, சுரமஞ்சரியிடம் இங்கே வயதான ஒருவர் வந்திருக்கின்றார். அவரைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது. அவரை தடுத்தும் அவர் இங்கிருந்து செல்வதாக இல்லை. என்ன செய்வது என்று எங்களுக்கும் புரியவில்லை? நீங்கள் வந்து பாருங்கள் என்று கூறி சுரமஞ்சரியை கையோடு அழைத்து சென்றாள்.
🌟 அங்கே வந்த சுரமஞ்சரி வயதானவரை பார்த்து, இவரை என்ன செய்வது? என்று எண்ணிக் கொண்டே, வயதானவரே! உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டாள்.
🌟 அதற்கு வயதான தோற்றத்தில் இருக்கும் சீவகனோ, அழகான கன்னிப்பெண்கள் எதை கொடுத்தாலும் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுடைய இளமையை ருசித்தால் நான் தொலைந்த இளமை எனக்கு கிடைத்துவிடும் என்று கூறினான்.
🌟 வயதானவரிடமிருந்து சற்றும் எதிர்பாராத இந்த பதிலை கேட்ட சுரமஞ்சரி, காடு வா வா என்று கூறுகிறது. வீடு போ போ என்று துரத்துகிறது. இந்த வயதில் இளமை திரும்புகிறதா? அதுவும் கன்னிப்பெண்கள் எதை கொடுத்தாலுமா? என்று கூறியபடியே சிரித்தாள்.
🌟 அவள் சிரிப்பதை பார்த்த பணிப்பெண்கள் அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அதாவது, நீண்ட நெடும் நாட்களாக சிரிக்காமல் இருந்தவள் இன்று மனமுவந்து சிரிப்பதை பார்த்து ஆச்சரியமானார்கள்.
🌟 நான் என்ன பொய்யா சொல்ல போகிறேன்! நான் உண்மையை தான் சொல்கிறேன் பெண்ணே! நீ என்னை நம்பவில்லையா? என்று அந்த வயதானவர் கேட்டார்.
🌟 உடனே சுரமஞ்சரி, நான் உங்களை நம்புகின்றேன் வயதானவரே! என்றாள். பின், அங்கிருந்த பணிப்பெண்களிடம் வயதானவருக்கு வேண்டிய உணவினை கொடுத்து அவரை அனுப்பி விடுங்கள் என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
🌟 பணிப்பெண்களும் வயதானவருக்கு வேண்டிய உணவினை கொடுத்தார்கள். சாப்பிட்டு முடித்த வயதானவர் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தார்.
🌟 அதேசமயம் திடீரென்று அறையில் இருந்து வெளிவந்த சுரமஞ்சரி, அங்கு வயதானவர் அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவரின் அருகில் சென்று நின்றாள்.
பங்குனி மாதம் ஸ்ரீரங்கம் செல்வது நல்லதா? 4ல் சனி இருந்தா ல் என்ன பலன்? கோழி குஞ்சுகள் முட்டையில் இருந்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மார்கழி மாதம் வளைகாப்பு வடகிழக்கு பகுதி அக்னி நட்சத்திரத்தில் சுப காரியங்கள் செய்யலாமா? வாழைப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பசுமையான வாழையிலையை கனவில் கண்டால் என்ன பலன்? சித்திரை மாதம் நிலவுகால் வைக்கலாமா? வெள்ளி காசு கனவில் வந்தால் என்ன பலன்? abijith தேனீக்கள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தீபாவளி பாரிஜாதம் பெரிய கொம்பு வைத்த விலங்கு என்னை முட்ட வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் லக்னத்திற்கு 7-ல் ராகு இருந்தால் என்ன பலன்? காளை மே 03 இரு புருவங்கள் இணைந்திருந்தால் என்ன பலன்? வெற்றி கிடைக்கும்