No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - புத்திசேனனிடம் சவால் விட்ட சீவகன்..!!

Apr 01, 2023   Ramya   172    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... புத்திசேனனிடம் சவால் விட்ட சீவகன்..!!

🌟 சீவகன் சுரமஞ்சரியை நினைத்து அப்பெண் பாவம் என்று கூற, பாவம் அந்த பெண்ணல்ல... நீ தான்! ஏனென்றால், ஆண்கள் என்றாலே வெறுத்து ஒதுக்கக்கூடிய அந்த பெண்ணிடம் நீ காதலை உருவாக்கி அவளை மணந்து கொண்டால், நீ காமத்திலகன் என்பதை நான் ஒப்பு கொள்கின்றேன் என்றான் புத்திசேனன்.

🌟 அவ்வளவு தானே! அவளிடத்தில் இருக்கக்கூடிய வடுவை மறைத்து, என் மீது ஆசையை உருவாக்கி, அவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று புத்திசேனனின் சவாலை ஏற்று கொண்டான் சீவகன்.


🌟 இதை மிகவும் எளிமையான காரியம் என்று நினைத்தாயா? அல்லது வாளை எடுத்து கொண்டு எதிரியை போரிட்டு வெற்றி கொள்வது என்று நினைத்தாயா? இந்த காரியம் நீ நினைக்கும்படி அவ்வளவு எளிதல்ல. அவள் ஒரு பதுமை. யாரிடத்தில் என்ன இருக்கின்றது என்பதை கூட அறிந்து விடலாம். ஆனால் பதுமையின் மனதில் இருக்கக்கூடியதை புரிந்து கொள்ளவே முடியாது.

🌟 அதுமட்டுமல்லாமல் அவள் வீட்டை விட்டு வெளியே வருபவளும் இல்லை. நீயோ அந்த தெருவிற்குள் நுழையவும் முடியாது. அப்படி இருக்கும் பொழுது எப்படி இது சாத்தியமாகும்? என்று கேட்டான் புத்திசேனன்.

🌟 தடைகள் பல இருந்தாலும் அதை தகர்த்தெறியும் மனம் என்னிடத்தில் இருக்கின்ற பொழுது நான் எதற்காக அச்சம் கொள்ள வேண்டும். அந்த பெண் இருக்கும் தெருவிற்குள் இளமையான ஆடவர்கள் தானே செல்ல முடியாது. ஆனால் வயதானவர்கள் செல்ல எந்தவிதமான தடைகளும் இல்லையே! என்றான்.

🌟 சீவகனுடைய இந்த கூற்றே அடுத்து என்ன செய்ய போகின்றான்? என்பதை புத்திசேனனுக்கு விளக்குவதாக இருந்தது.

🌟 நீண்ட தூர பயணங்களுக்கு பிறகு சீவகனும், அவனுடைய நண்பர்களும் சுரமஞ்சரி இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.

🌟 அங்கு அவள் இருக்கும் வீட்டினை சுற்றி நான்கு புறங்களிலும் உள்ள தெருக்கள் யாவும் அடைக்கப்பட்டு இருந்தன. இரு அடுக்கு பாதுகாப்புகளுடன் காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அதாவது முதல் அடுக்கில் ஆண் காவலர்களும், இரண்டாம் அடுக்கில் பெண் காவலர்களும் நின்று தடுப்புகளை பாதுகாத்து கொண்டிருந்தனர்.

🌟 அப்பொழுது புத்திசேனன், இப்பொழுது கூட ஒன்றும் ஆகவில்லை சீவகா! நாம் இங்கிருந்து சென்று விடலாம். இதையெல்லாம் உன்னால் செய்ய முடியாது என்று சீவகனை தூண்டி விடுவது போல கூறினான்.

🌟 உடனே சீவகன் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சிறு தூரத்திற்கு சென்று, சுதஞ்சணன் கூறிய மந்திரங்களில் ஒன்றான உடல் தோற்றத்தை மாற்றுவதற்கான மந்திரத்தை கூறி வயோதிக தோற்றத்திற்கு மாறினான்.

🌟 பின் அந்த தோற்றத்துடனேயே காவலர்கள் பாதுகாத்து கொண்டிருக்கும் தெருவை கடந்து உள்ளே செல்ல முற்பட்டான்.

🌟 அப்பொழுது அங்கிருந்த காவலர்களில் ஒருவன், வயதானவரே! இங்கெல்லாம் நீங்கள் வருவதற்கு அனுமதி கிடையாது. இங்கிருந்து கிளம்புங்கள் என்று கூறினான்.


🌟 காவலன் கூறிய எதையும் கேட்காதது போல, அந்த வயதானவர் (சீவகன்) நான் சிறு வயதில் இருந்தே பால் சாதம் தான் சாப்பிடுவேன். இப்பொழுது கன்னிப்பெண்கள் எதை கொடுத்தாலும் சாப்பிடுவேன் என்று கூறினார்.

🌟 அது சரி... ஆள் தான் வயதானவர் என்று பார்த்தேன். காதும் கேட்கவில்லையா? என்ன கொடுமையடா இது! என்று கூறிவிட்டு, மீண்டும் உரத்த குரலில் வயதானவரே! இங்கெல்லாம் நீங்கள் செல்லக்கூடாது. இங்கு ஆடவருக்கு அனுமதி கிடையாது என்று கூறினான்.

🌟 அதற்கு அந்த வயதானவர், அட போங்கள் தம்பி! எனக்கு பசிக்கிறது. என்னால் இப்பொழுது எங்கும் செல்ல முடியாது. நான் உன் வீட்டிற்கெல்லாம் வரவில்லை. நீயே போய் சாப்பிட்டு கொள். நான் இங்கிருக்கும் பெண்களிடமே வாங்கி சாப்பிட்டு கொள்கிறேன் என்று கூறினார்.


Share this valuable content with your friends