🌟 உலகெங்கும் சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அன்னப்பருக்கையிலும் சிவரூபம் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
🌟 உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடக்கிறது.
🌟 தஞ்சாவூர் பெரியகோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் டன் சாதத்தால் அலங்கரித்து அந்த உணவை பிரசாதமாக கொடுப்பார்கள்.
🌟 தமிழகத்தின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகமும் ஒன்று.
யார் யாருக்கு அன்னதோஷம் ஏற்படும்?
🌟 பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்காதவர்களையும், வயதானவர்களையும், கர்ப்பிணிகளையும் சாப்பிடவிடாமல் தடுப்பவர்களுக்கு அன்னதோஷம் பிடிக்கும். பந்தியில் சாப்பிட உட்கார்ந்தவர்களை எழுப்புவதும் பாவமாகும்.
🌟 தான் உண்டது போக ஏராளமான உணவு கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்களையும், உணவுகளை வீணாக்குபவர்களையும் அன்னதோஷம் ஏற்படும்.
🌟 பெற்றவர்களுக்கு உணவு கொடுக்காதவர்களையும், பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களையும் அன்னதோஷம் பிடிக்கும்.
🌟 அன்னதோஷத்தாலும், அன்ன துவேஷத்தலும் பாதிக்கப்பட்டவர்கள் ஐப்பசி பௌர்ணமி நாளில் அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமானை தரிசனம் செய்வது மிகவும் நல்லது.
அன்னாபிஷேக தரிசனம் :
🌟 அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி (பச்சரிசி) வாங்கி கோவிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்து பேருக்கு அன்னதானம் செய்வது போன்றவற்றை செய்யலாம்.
🌟 ஸ்ரீ அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாகுவது குறையும்.
மேலும், உணவு தட்டுப்பாடின்றி கிடைக்கும்.
🌟 இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று உங்களது குறைகளை நீக்கி நலமுடன் வாழுங்கள்.